‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
இந்தியத் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் கடந்த சில வருடங்களாக தெலுங்குத் திரைப்படங்கள் ஆச்சரியப்படும் விதத்தில் அதிக வசூலை அள்ளிக் குவித்து வருகின்றன. இந்த ஆண்டில் 'கல்கி 2898 ஏடி' படம் 1000 கோடி வசூலைக் கடந்த படமாக அமைந்தது. அடுத்து 1000 கோடி வசூல் படமாக அடுத்த வாரம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாக உள்ள 'தேவரா 1' படம் அமையுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
ஆந்திர மாநில அரசு அப்படத்திற்காக அனுமதித்துள்ள 6 காட்சிகள், டிக்கெட் கட்டண உயர்வு ஆகியவற்றால் அது சாத்தியமாகும் என தாராளமாகச் சொல்லலாம். ஆந்திர வரலாற்றிலேயே படம் வெளியாகும் தினத்தில் 6 காட்சிகளுக்கு அனுமதி அளிப்பது பல வருடங்களுக்குப் பிறகு நடந்திருக்கிறது என்கிறார்கள்.
படம் வெளியாகும் செப்டம்பர் 27ம் தேதியன்று நள்ளிளிரவு 12 மணியிலிருந்து 6 காட்சிகளும், அதற்குப் பிறகு அடுத்த 9 நாட்களுக்கு மட்டும் தினமும் 5 காட்சிகளும் திரையிட்டுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டிக்கெட் கட்டணங்களில் குறைந்த வகுப்புக் கட்டணங்களில் ரூ.60, உயர்ந்த வகுப்புக் கட்டணங்களில் ரூ.110, மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ரூ.135 கூடுதலாக உயர்த்திக் கொள்ளவும் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில அரசு பிறப்பித்துள்ள இந்த அரசு ஆணைக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும், துணை முதல்வர் பவன் கல்யாணுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ஜுனியர் என்டிஆர். இவரும் சந்திரபாபு நாயுடுவும் உறவினர்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.