சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

இந்தியத் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் கடந்த சில வருடங்களாக தெலுங்குத் திரைப்படங்கள் ஆச்சரியப்படும் விதத்தில் அதிக வசூலை அள்ளிக் குவித்து வருகின்றன. இந்த ஆண்டில் 'கல்கி 2898 ஏடி' படம் 1000 கோடி வசூலைக் கடந்த படமாக அமைந்தது. அடுத்து 1000 கோடி வசூல் படமாக அடுத்த வாரம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாக உள்ள 'தேவரா 1' படம் அமையுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
ஆந்திர மாநில அரசு அப்படத்திற்காக அனுமதித்துள்ள 6 காட்சிகள், டிக்கெட் கட்டண உயர்வு ஆகியவற்றால் அது சாத்தியமாகும் என தாராளமாகச் சொல்லலாம். ஆந்திர வரலாற்றிலேயே படம் வெளியாகும் தினத்தில் 6 காட்சிகளுக்கு அனுமதி அளிப்பது பல வருடங்களுக்குப் பிறகு நடந்திருக்கிறது என்கிறார்கள்.
படம் வெளியாகும் செப்டம்பர் 27ம் தேதியன்று நள்ளிளிரவு 12 மணியிலிருந்து 6 காட்சிகளும், அதற்குப் பிறகு அடுத்த 9 நாட்களுக்கு மட்டும் தினமும் 5 காட்சிகளும் திரையிட்டுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டிக்கெட் கட்டணங்களில் குறைந்த வகுப்புக் கட்டணங்களில் ரூ.60, உயர்ந்த வகுப்புக் கட்டணங்களில் ரூ.110, மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ரூ.135 கூடுதலாக உயர்த்திக் கொள்ளவும் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில அரசு பிறப்பித்துள்ள இந்த அரசு ஆணைக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும், துணை முதல்வர் பவன் கல்யாணுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ஜுனியர் என்டிஆர். இவரும் சந்திரபாபு நாயுடுவும் உறவினர்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.




