அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

நடிகை ஷாலின் சோயா மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இருந்து படங்களில் நடித்து வருகிறார். தமிழில் 'ராஜா மந்திரி' படத்தில் நடித்திருந்தார். மேலும் ‛குக் வித் கோமாளி 5' என்கிற ரியாலிட்டி ஷோவின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஷாலின் சோயா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவரின் ஆசை குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது: " எனக்கு நல்ல நல்ல படங்களை இயக்க வேண்டும் என்பது தான் கனவு. இதை நான் கூறினால், என்னை நடிக்கிறாள் என்று சொல்கிறார்கள். என்னைப் பத்தி என்ன தெரியும் அவங்களுக்கு ? 10 வருடங்களாக படம் இயக்க முயற்சி செய்து வருகிறேன். இதுவரை 8க்கும் மேல் குறும்படங்களை இயக்கியுள்ளேன். நாம வாழ்ந்து வரும் வாழ்க்கைக்கு அர்த்தம் வேணும். அது எனக்கு சினிமாதான். இறப்பதற்கு முன்பு ஒரு நல்ல இயக்குனர் என்கிற பெயரை நான் வாங்கணும். மக்களை என்டர்டெயின் பண்ணணும். அதுதான் என் லட்சியம். " என மனம் திறந்து பேசியுள்ளார் ஷாலின் சோயா.