Advertisement

சிறப்புச்செய்திகள்

23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா

27 ஆக, 2025 - 01:07 IST
எழுத்தின் அளவு:
A-virgin-relationship-at-the-age-of-48-Suchitra-laments-another-disappointment
Advertisement

தமிழில் பிரபல பின்னணி பாடகியாக இருந்தவர் சுசித்ரா. ‛யாரடி நீ மோகினி' உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் கார்த்திக் குமாரை காதலித்து மணந்தார். சில ஆண்டுகளுக்கு முன் சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் சிக்கினார் சுசித்ரா. இதில் அவரது வாழ்க்கையே தலைகீழானது. கணவர் பிரிந்து சென்றார். சினிமா வாய்ப்பு போனது. சிலகாலம் மன அழுத்தத்தில் தவித்து வந்து பின்னர் அதிலிருந்து மீண்டார். அவ்வப்போது பிரபலங்கள் பற்றி சர்ச்சைக்குரிய விஷயங்களில் சிக்கி பரபரப்பானார். கடைசியாக மும்பையில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக தெரிவித்திருந்தார்.

கன்றாவியான ரிலேஷன்ஷிப்
இந்நிலையில் தற்போது தனது வாழ்வில் வந்த இரண்டாவது காதல் மற்றும் அதனால் வந்த பிரச்னைகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது... ‛‛சுச்சி லீக்ஸ் என்ற தர்த்திரம் புடிச்ச விஷயம் என் வாழ்க்கையில் நடந்த பின் இனி அதை விட பெரிய விஷயம் எதுவும் நடக்காது என நினைத்தேன். ஆனால் அதை விட ஒன்னு நடந்துருச்சு. கடந்த இரண்டரை ஆண்டுகளாக நான் ஒருவரை காதலித்தேன். எனது 48 வயதில் கன்றாவியான ஒரு ரிலேஷன்ஷிப்பில் நான் போய் மாட்டிக்கிட்டேன். என் வாழ்வில் எதெல்லாம் நடக்க கூடாது என நினைத்தேனோ அது எல்லாமும் நடந்தது.

அவர் பெயர் சண்முகராஜன். நான் அவரை திருமணம் செய்ததாக கூட ஒரு பேட்டியில் கூறினேன். காரணம் அந்தசமயம் எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து இருந்தது. என் வாழ்க்கையை காப்பாற்றுவது போல் என் வாழ்வில் வந்தார். தனுஷ் உன் வாழ்க்கையை கெடுத்துவிட்டான். நானும் என் வாழ்வில் நிறைய அடிபட்டு இருக்கேன். முதல் மனைவியால் நிறைய கஷ்டப்பட்டேன். இனி உனக்கு நான், எனக்கு நீ என இருப்போம் என ஆறுதல் வார்த்தைகளை கூறியதால் அதை நம்பி நானும் காதலித்தேன். என் பணத்தை எல்லாம் அவரிடம் கொடுத்தேன். ஆனால் தினமும் என்னை அடித்து, மிதித்து, துன்புறுத்தி கொடுமைப்படுத்தினான். தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக கூறினான். ஆனால் அவனது மனைவி என் வீட்டிற்கு வந்து என் கணவரை என்னிடம் கொடுத்து விடு என கெஞ்சினார். அவனை உண்மையாக காதலித்தேன். ஆனால் என் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டிவிட்டான். அது எவ்வளவு பணம் என்று சொன்னால் தலை சுற்றிவிடும்.

இப்போது நான் தெளிவாகி விட்டேன். சண்முகராஜன் மீது வழக்கு போட்டுள்ளேன். அவனிடமிருந்து மொத்த பணத்தையும் ஒரு பைசா கூட விடாமல் வாங்கிவிட்டு தான் விடுவேன். இன்னும் இரண்டு வாரத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. இனி என்னை அடிக்கடி நீதிமன்றத்தில் சந்திக்கலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள்‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் ... ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Premanathan S - Cuddalore,இந்தியா
27 ஆக, 2025 - 01:08 Report Abuse
Premanathan S வீணா போன பொம்புள்ள எவ்வளவு பட்டும் திருந்தாத கேசு
Rate this:
27 ஆக, 2025 - 01:08 Report Abuse
தமிழ் நாட்டு அறிவாளி வாழ்க்கையில் நமக்கு சனி பிடிக்க கூடாது, இல்லை சனி புடிச்சவன் கூட நாம இருக்க கூடாது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in