ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் |
நடிகர் ரவி மோகனும், அவர் மனைவி ஆர்த்தியும் கருத்து வேறுபாடு காரணமாக சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்கள். இப்படியான நிலையில் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு பாடகி கெனிஷாவுடன் ஜோடியாக என்ட்ரி கொடுத்தார் ரவி மோகன். இதையடுத்து ஆர்த்தியும் அவரது ஆதரவு நடிகைகளும் ரவி மோகனையும் பாடகி கெனிஷாவையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பாடகி சுசித்ரா தனது இணையப் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ''நடிகர் ரவி மோகனும், கெனிஷாவும் அப்படி என்ன பெரிய தப்பு பண்ணிவிட்டார்கள். சினிமா உலகத்தில் யாரும் செய்யாத தவறா செய்துவிட்டார்கள். எல்லோரும் கமுக்கமா செய்கிறார்கள். ரவியோ அதை வெளிப்படையாக செய்கிறார். அதோடு அந்த பெண்ணுக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கிறார். அதனால் அனைத்து பெண்களுமே கெனிஷாவை பார்த்து பெருமைப்பட வேண்டும். எதற்காக அவரை தாழ்த்தி பேசுகிறீர்கள். இவ்வளவு ஆண்டுகளாக வொர்க் அவுட் ஆகாத ஒரு திருமணத்திற்காக ஒருத்தி அழுது கொண்டிருக்கிறார்.
அவருக்கு கெனிஷாவை பற்றி கூறுவதற்கு என்ன தகுதி உள்ளது. அவர் என்ன பெரிதாக தவறு செய்து விட்டார். யாரும் போடாத மியூசிக் வீடியோவை அவர் போட்டு விட்டாரா? அவரது வீடியோ உங்கள் கண்ணை உறுத்துகிறதா? நடிகை ஆண்ட்ரியா மேடையில் போடும் டிரசைதான் அவரும் போடுகிறார். அப்படி இருக்கும்போது எதற்காக அவருடைய உடைகளை விமர்சனம் செய்கிறீர்கள். இது உங்களுக்கு அசிங்கமாக இல்லையா?'' என்று சரமாரியாக கேள்வி கேட்டுள்ள பாடகி சுசித்ரா, ''ரவி மோகன் தன்னுடைய பெயரிலிருந்த ஜெயம் என்பதை எடுக்காமல் இருந்திருக்கலாம். அந்த பெயர்தான் அவருக்கு தனித்துவமாக இருந்தது'' என்றும் அந்த வீடியோவில் பேசி இருக்கிறார் பாடகி சுசித்ரா.