மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

நடிகர் ரவிமோகன், ஆர்த்தி தம்பதியினர் தங்களுக்குள் ஏற்பட்ட மனகசப்பால் பிரிந்து இருக்கிறார்கள். இன்னமும் அவர்களுக்கு சட்டப்படி விவகாரத்து கிடைக்கவில்லை. இவர்கள் பிரிவுக்கு பாடகி கெனிஷாதான் என்று கூறப்படுகிறது. ரவிமோகனுக்கு விவகாரத்து கிடைத்தவுடன் இருவரும் திருமணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், சமீபகாலமாக ரவிமோகன் செல்லும் இடங்களுக்கு கெனிஷா செல்கிறார். பட விழா, திருவண்ணாமலை கோயில், சினிமா நிகழ்ச்சி என அனைத்திலும் அவர் உடனே இருக்கிறார்.
கிட்டத்தட்ட மனைவி மாதிரி நடந்து கொள்கிறார். 'பராசக்தி' பட ரிலீஸ் என்று ரவிமோகன்தான் அந்த படத்தின் ஹீரோ என்ற ரீதியில் அவர் கொடுத்த பேட்டி சர்ச்சை ஆனது. அதை தொடர்ந்தும் ரவிமோகன் நிழல் மாதிரி கெனிஷா இருக்கிறார். அவரை மீறி ரவிமோகனை யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதற்கு முன்பு ரவிமோகனிடம் இருந்தவர்களும் அவரிடம் இருந்து விலகிவிட்டனர். அப்பா, அம்மா, அண்ணன்களும் விலகி நிற்கிறார்கள். முழுக்க கெனிஷா கட்டுப்பாட்டில் ரவிமோகன் வந்துவிட்டார். இருவர்கள் இணைந்து 3 படங்களை தயாரிக்கிறார்கள். கெனிஷாவின் தலையீடு, ரவிமோகனுக்கு பிளஸா? மைனஸா என்பது போக, போக தெரியவரும் என்கிறார்கள் கோலிவுட்டில்.