அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் | தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வாரா வடிவேலு | விரைவில் யூத் பட வெற்றி விழா | நிறையபேர் கைலாசம் போயிட்டாங்க, ரஞ்சிதா கைலாச போயிட்டாங்க : கஸ்தூரி | 'காந்தாரா' அவதூறு : சாமுண்டி கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க ரன்வீர் சிங்கிற்கு கோர்ட் உத்தரவு |

கலக்கப் போவது யாரு பாலா ஹீரோவாக அறிமுகம் ஆகும் ‛காந்தி கண்ணாடி' படம் செப்டம்பர் 5ல் ரிலீஸ் ஆகிறது. அதேதேதியில் சிவகார்த்திகேயன் நடித்த ‛மதராஸி' படமும் ரிலீஸ். அவருடன் போட்டியா என்ற கேள்விக்கு பாலா சொன்ன பதில்
இதுவரை சினிமாவில் 18க்கும் அதிகமாக படங்களில் காமெடியனாக நடித்து இருக்கிறேன். அதில் பல படங்களில் நான் நடித்த சீன் வந்தது இல்லை. இதெல்லாம் வளர்ந்து வருகிற நேரத்தில் சகஜம் என அமைதியாக இருந்தேன். அப்போது என் நண்பர் ஷெரிப் என்னை ஹீரோ ஆக்குற இந்த கதை சொன்னார். கதை நன்றாக இருந்ததால் பாலாஜி சக்திவேல், வீடு அர்ச்சனா முக்கியமான கேரக்டரில் நடிக்க ஓகே சொன்னார்கள். அதேசமயம் பல ஹீரோயின்கள் ஆபிஸ் வந்து கதை கேட்டார்கள். கதை சூப்பர் என்றார்கள்.. ஆனால் நான் ஹீரோ என்றதும் பலர் நடிக்க மறுத்தார்கள்.
கடைசியில் 51வது நபராக வந்த நமீதா கிருஷ்ணமூர்த்தி தான் என்னுடன் நடிக்க ஓகே சொன்னார். செப்டம்பர் 5ம் தேதி என் படமும், சிவகார்த்திகேயன் மதராஸி படமும் ரிலீஸ். நாங்கள் அவருக்கு போட்டி அல்ல. அவர் படம் கண்டிப்பாக ஜெயிக்கும், எங்கள் படம் ஜெயிக்க ஆதரவு கொடுங்க. அவர் படத்துக்கு வரும் கூட்டம் டிக்கெட் கிடைக்காவிட்டால் எங்கள் படத்துக்கு வருவார்கள். நான் உதவிகள் செய்கிறேன். அது விளம்பரமல்ல, மக்கள் போட்ட பிச்சையால் நான் இப்போது நன்றாக இருக்கிறேன். என்னால் முடிந்ததை திருப்பி செய்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.