மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
மலையாளத்தில் மம்மூட்டி - ஜோதிகா இணைந்து நடித்துள்ள படம் காதல் தி கோர். இந்த படம் நவம்பர் 23ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டு புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான போது அதற்கு பாராட்டு தெரிவித்து பட குழுவையும் வாழ்த்தி இருந்தார் நடிகர் சூர்யா. இப்படியான நிலையில், இந்த காதல் தி கோர் படத்தின் கதை அம்சம் சர்ச்சைக்குரியதாக இருப்பதாக சொல்லி, கத்தார் மற்றும் குவைத் ஆகிய இரண்டு நாடுகளிலும் இப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும் திட்டமிட்டபடி நவம்பர் 23ம் தேதி இந்த படம் மற்ற நாடுகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதேபோல் ஏற்கனவே இந்திய மொழிகளில் உருவான சில படங்களுக்கு அரபு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .