சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் |

கடந்த வருடம் வெளியான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்தில் கதாநாயகனாக நடித்து பெயர் பெற்றதோடு அல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் மிகப்பெரிய வசூலை அள்ளினார் மலையாள நடிகர் சவுபின் சாஹிர். கடந்த ஆகஸ்ட் மாதம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கூலி' திரைப்படத்தில் வில்லனாக மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி தென்னிந்திய அளவில் இன்னும் பிரபலமாகியுள்ளார். இந்த நிலையில் அவர் அடுத்ததாக நடித்துள்ள 'பாதி ராத்திரி' என்கிற படம் வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நவ்யா நாயர் நடித்துள்ளார்.
இந்த படத்தை இயக்குனர் ரதீனா இயக்கியுள்ளார். இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் மலையாளத்தில் மம்முட்டி, பார்வதி இருவரையும் முதன்முறையாக ஒன்றிணைத்து 'புழு' என்கிற படத்தை இயக்கியிருந்தார். ஆணவக் கொலையை மையப்படுத்தி வெளியான அந்த படம் வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் இந்த 'பாதி ராத்திரி' படம் விறுவிறுப்பான இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகி இருப்பதாலும் சவுபின் சாஹிர் அதில் கதாநாயகனாக நடித்திருப்பதாலும் இந்த படம் இயக்குனர் ரதீனாவுக்கு நிச்சயம் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.