பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

கடந்த வருடம் வெளியான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்தில் கதாநாயகனாக நடித்து பெயர் பெற்றதோடு அல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் மிகப்பெரிய வசூலை அள்ளினார் மலையாள நடிகர் சவுபின் சாஹிர். கடந்த ஆகஸ்ட் மாதம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கூலி' திரைப்படத்தில் வில்லனாக மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி தென்னிந்திய அளவில் இன்னும் பிரபலமாகியுள்ளார். இந்த நிலையில் அவர் அடுத்ததாக நடித்துள்ள 'பாதி ராத்திரி' என்கிற படம் வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நவ்யா நாயர் நடித்துள்ளார்.
இந்த படத்தை இயக்குனர் ரதீனா இயக்கியுள்ளார். இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் மலையாளத்தில் மம்முட்டி, பார்வதி இருவரையும் முதன்முறையாக ஒன்றிணைத்து 'புழு' என்கிற படத்தை இயக்கியிருந்தார். ஆணவக் கொலையை மையப்படுத்தி வெளியான அந்த படம் வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் இந்த 'பாதி ராத்திரி' படம் விறுவிறுப்பான இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகி இருப்பதாலும் சவுபின் சாஹிர் அதில் கதாநாயகனாக நடித்திருப்பதாலும் இந்த படம் இயக்குனர் ரதீனாவுக்கு நிச்சயம் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.