‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

கரூர் சம்பவத்திற்குப் பிறகு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மீதான இமேஜ் சரிந்துள்ளது. அவர் தங்கள் கூட்டணிக்கு வந்துவிடுவார் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமியும் எதிர்பார்த்து வருகிறார்.
இதுவரையில் விஜய் பேசிய போதெல்லாம் 'திமுக என் அரசியல் எதிரி, பா.ஜ., என் கொள்கை எதிரி' என்றே பேசி வந்திருக்கிறார். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
இதனிடையே, ஆந்திர அரசியல் வட்டாரங்களில் ஜன சேனா கட்சித் தலைவரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கியதாக சொல்லப்படுகிறது.
தனது அண்ணன் சிரஞ்சீவி, பிரஜா ராஜ்ஜியம் கட்சி ஆரம்பித்த போது தேர்தலில் தனித்து நின்றதால்தான் கட்சி தோல்வியைத் தழுவியது. கூட்டணியில் நிற்கும் போதுதான் வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது என தன் கட்சியைப் பற்றி குறிப்பிட்டுப் பேசியதாகத் தெரிகிறது.
தன்னை முதல்வர் வேட்பாளர் என்றே தனது கட்சித் தொண்டர்களிடம் பேசி வந்த விஜய், அதை விட்டுவிட்டு கூட்டணி சேர்ந்து, வேறொருவர் முதல்வர் ஆக ஆதரவு கொடுப்பாரா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.