என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

கரூர் சம்பவத்திற்குப் பிறகு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மீதான இமேஜ் சரிந்துள்ளது. அவர் தங்கள் கூட்டணிக்கு வந்துவிடுவார் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமியும் எதிர்பார்த்து வருகிறார்.
இதுவரையில் விஜய் பேசிய போதெல்லாம் 'திமுக என் அரசியல் எதிரி, பா.ஜ., என் கொள்கை எதிரி' என்றே பேசி வந்திருக்கிறார். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
இதனிடையே, ஆந்திர அரசியல் வட்டாரங்களில் ஜன சேனா கட்சித் தலைவரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கியதாக சொல்லப்படுகிறது.
தனது அண்ணன் சிரஞ்சீவி, பிரஜா ராஜ்ஜியம் கட்சி ஆரம்பித்த போது தேர்தலில் தனித்து நின்றதால்தான் கட்சி தோல்வியைத் தழுவியது. கூட்டணியில் நிற்கும் போதுதான் வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது என தன் கட்சியைப் பற்றி குறிப்பிட்டுப் பேசியதாகத் தெரிகிறது.
தன்னை முதல்வர் வேட்பாளர் என்றே தனது கட்சித் தொண்டர்களிடம் பேசி வந்த விஜய், அதை விட்டுவிட்டு கூட்டணி சேர்ந்து, வேறொருவர் முதல்வர் ஆக ஆதரவு கொடுப்பாரா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.