பிரியதர்ஷினின் 100வது படத்தில் ஹீரோவாக மோகன்லால் | லகான் இயக்குனரை சந்தித்த விஷ்ணு விஷால் | பிக்பாஸை தொகுத்து வழங்குவது ஏன் ? : சீசன் 6 பைனலில் மோகன்லால் நெகிழ்ச்சி | தர்ஷனின் கைது குறித்து மனம் திறந்த அவரது ஆஸ்தான நடிகை | சிரஞ்சீவியின் முன்னாள் மருமகன் மரணம் | ஏஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் பட டைட்டில் இதுதானா ? | 'புஷ்பா 2' - வில்லன் கதாபாத்திரத்தில் மாற்றம் ? | நல்ல படத்தில் இருப்பதே பெருமைதான் : மம்தா மோகன்தாஸ் | தமிழில் வெளியாகும் சாய் தன்ஷிகாவின் தெலுங்கு படம் | லைகாவும், விஷாலும் மத்தியஸ்தம் செய்துகொள்ள கோர்ட் உத்தரவு |
பிரபல எடிட்டர் மோகனின் மகன் ரவி. தெலுங்கு படங்களை வாங்கி அதை டப் செய்து வெளியிட்டு வந்த மோகன், தெலுங்கில் ஹிட்டான 'ஜெயம்' படத்தை வாங்கி அதில் தன் மகன் ரவியை நாயகனாகவும், இன்னொரு மகன் ராஜாவை இயக்குனராகவும் அறிமுகப்படுத்தினார். படம் பெரிய வெற்றி பெறவே இருவரும் அவரவர் துறையில் வேகமாக முன்னேறினார்கள்.
தற்போது ஜெயம் ரவி சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. இதுகுறித்து ஜெயம் ரவி வெளியிட்டுள்ள பதிவில் “திரையுலக வாழ்க்கையில் முக்கியமான இந்த மைல் கல்லை அடைந்து இருப்பதை அளவில்லாத நன்றி உணர்வுகளோடு கொண்டாடுகிறேன். என்மீது அன்பு வைத்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'ஜெயம்' படத்தில் இருந்து 'பொன்னியின் செல்வன்' படம் வரை என்மீது நம்பிக்கை வைத்து வாய்ப்புகள் அளித்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்களுக்கும் எனது 20 ஆண்டுகால பயணத்தில் அங்கமாக இருந்த அனைவருக்கும் நன்றி'' என்று கூறியுள்ளார்.
25 படங்களுக்கு மேல் நடித்துள்ள ஜெயம்ரவி கடைசியாக பொன்னியின் செல்வனில் அருண்மொழி வர்மனாக நடித்திருந்தார். தற்போது சைரன், இறைவன், மற்றும் பெயரிடப்படாத தனது 30வது படத்தில் நடித்து வருகிறார்.