இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
பிரபல எடிட்டர் மோகனின் மகன் ரவி. தெலுங்கு படங்களை வாங்கி அதை டப் செய்து வெளியிட்டு வந்த மோகன், தெலுங்கில் ஹிட்டான 'ஜெயம்' படத்தை வாங்கி அதில் தன் மகன் ரவியை நாயகனாகவும், இன்னொரு மகன் ராஜாவை இயக்குனராகவும் அறிமுகப்படுத்தினார். படம் பெரிய வெற்றி பெறவே இருவரும் அவரவர் துறையில் வேகமாக முன்னேறினார்கள்.
தற்போது ஜெயம் ரவி சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. இதுகுறித்து ஜெயம் ரவி வெளியிட்டுள்ள பதிவில் “திரையுலக வாழ்க்கையில் முக்கியமான இந்த மைல் கல்லை அடைந்து இருப்பதை அளவில்லாத நன்றி உணர்வுகளோடு கொண்டாடுகிறேன். என்மீது அன்பு வைத்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'ஜெயம்' படத்தில் இருந்து 'பொன்னியின் செல்வன்' படம் வரை என்மீது நம்பிக்கை வைத்து வாய்ப்புகள் அளித்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்களுக்கும் எனது 20 ஆண்டுகால பயணத்தில் அங்கமாக இருந்த அனைவருக்கும் நன்றி'' என்று கூறியுள்ளார்.
25 படங்களுக்கு மேல் நடித்துள்ள ஜெயம்ரவி கடைசியாக பொன்னியின் செல்வனில் அருண்மொழி வர்மனாக நடித்திருந்தார். தற்போது சைரன், இறைவன், மற்றும் பெயரிடப்படாத தனது 30வது படத்தில் நடித்து வருகிறார்.