பிளாஷ்பேக் : கலோக்கியல் தலைப்பின் தொடக்கம் | தெலுங்கு கம்யூனிஸ்ட் தலைவராக நடிக்கும் கன்னட ராஜ்குமார் | யானை தந்த வழக்கு: மோகன்லாலின் உரிமம் ரத்து | கவர்ச்சிக்கு மாற நினைக்கும் கயாடு லோஹர் | டிசம்பர் 5ல் அகண்டா 2 ரிலீஸ் : தமிழில் பேசிய பாலகிருஷ்ணா | இன்னும் 2 மாதம் டல் சீசன் : பெரிய படங்கள் வராத நிலை | என் குழந்தைக்கு வயது 33 : ‛தேவர் மகன்' பற்றி கமல் பதிவு | ஐந்து மொழிகளில் வெளியான 'பாகுபலி தி எபிக் டிரைலர்' | 'டியூட்' படத்தை அடுத்து 'பைசன்' வெற்றி விழா | அஜித் மார்பில் அம்மன் டாட்டூ : பக்திப் பரவசத்தில் ரசிகர்கள் |

மறைந்த எழுத்தாளர் கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவல், தற்போது அதே பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. மணிரத்னம் இயக்கும் இப்படம் இருபாகங்களாக உருவாகி வருகிறது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார.
பொன்னியின் செல்வன் திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன, நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான வித்யா சுப்ரமணியன் இந்த படத்திற்கான டப்பிங் பேசும் பணிகளை முதன் முதலாக தொடங்கினார். பின் நடிகை த்ரிஷா டப்பிங் பேசி முடித்தார்.
இந்நிலையில் நடிகர் கார்த்தியும், ஜெயம் ரவியும் டப்பிங் பேசி முடித்துள்ளனர் என நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த படத்தில் அருள் மொழி வர்மனாக ஜெயம் ரவி நடித்துள்ளார். வந்தியத்தேவனாக கார்த்தி நடித்துள்ளார்.




