சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
இம்சை அரசன் 24ம் புலிகேசி பட பிரச்னையால் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த நடிகர் வடிவேலு மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். லைகா தயாரிப்பில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் தயாராகிறது. சுராஜ் இயக்குகிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.
இந்நிலையில் பாடல் பதிவு தொடர்பாக வடிவேலு, சுராஜ் உள்ளிட்டோர் லண்டன் சென்றிருந்தனர். அந்த வேலைகள் முடிந்து சென்னை திரும்பிய நிலையில் வடிவேலுவிற்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வடிவேலு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். தொடர்ந்து இயக்குனர் சுராஜிற்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது.
இதனால் படம் திட்டமிட்டு தொடங்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் படப்பிடிப்பில் எந்த மாற்றமும் இல்லை. படப்பிடிப்பு துவங்க இன்னும் மூன்று வாரம் இருப்பதால் அதற்குள் இருவரும் சரியாகி வந்துவிடுவர். அதனால் வரும் 18ம் தேதி ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.