அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

இம்சை அரசன் 24ம் புலிகேசி பட பிரச்னையால் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த நடிகர் வடிவேலு மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். லைகா தயாரிப்பில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் தயாராகிறது. சுராஜ் இயக்குகிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.
இந்நிலையில் பாடல் பதிவு தொடர்பாக வடிவேலு, சுராஜ் உள்ளிட்டோர் லண்டன் சென்றிருந்தனர். அந்த வேலைகள் முடிந்து சென்னை திரும்பிய நிலையில் வடிவேலுவிற்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வடிவேலு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். தொடர்ந்து இயக்குனர் சுராஜிற்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது.
இதனால் படம் திட்டமிட்டு தொடங்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் படப்பிடிப்பில் எந்த மாற்றமும் இல்லை. படப்பிடிப்பு துவங்க இன்னும் மூன்று வாரம் இருப்பதால் அதற்குள் இருவரும் சரியாகி வந்துவிடுவர். அதனால் வரும் 18ம் தேதி ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.