ஸ்பெயினிலும் சாதித்த அஜித் அணி: 3ம் இடம் பிடித்து அசத்தல் | அக்டோபர் 5ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன்- 9 ஆரம்பம்! | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் நாளை மாலை வெளியாகிறது! | என் சாம்பியனுக்கு அருகில் இருக்கிறேன்! - புகைப்படங்களுடன் ஷாலினி வெளியிட்ட பதிவு | பிளாஷ்பேக்: 'ஜுபிடர் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்க ஆசைப்பட்டு, முடியாமல் போன திரைப்படம் | 'ஓஜி' வரவேற்பு: பிரியங்கா மோகன் தெரிவித்த நன்றி | ‛தி பாரடைஸ்' படத்திலிருந்து மோகன் பாபு பர்ஸ்ட் லுக் வெளியானது! | தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ‛நோ' சொன்ன ருக்மணி வசந்த்.. ‛எஸ்' சொன்ன கீர்த்தி சுரேஷ்! | இளவட்ட இயக்குனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகை |
நகைச்சுவை நடிகர்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று வசனம் மூலமாக சிரிக்க வைப்பவர்கள், எம்.ஆர்.ராதா, தங்கவேலு, வி.கே.ராமசாமி முதல் விவேக் வரை இந்த வகையை சேர்ந்தவர்கள். இரண்டாவது வகை பாடி லேங்குவேஜ் எனப்படும் உடல்மொழியால் சிரிக்க வைப்பவர்கள். நாகேஷ், சுருளிராஜன் முதல் வடிவேலு வரை இந்த வகையை சேர்ந்தவர்கள்.
இந்த உடல்மொழி காமெடிக்கு முன்னோடி வி.எம்.ஏழுமலை. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுடன் நாடகங்களில் நடித்து வந்தவர் பின்னர் டவுன் பஸ், மிஸ்ஸியம்மா, மலைக்கள்ளன், மாயா பஜார், திகம்பர சாமியார், பொன்முடி, குணசுந்தரி, கடன் வாங்கி கல்யாணம், இல்லறமே நல்லறம், எல்லோரும் வாழ வேண்டும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். உடல் மொழி, குரல் மொழி இவரிடம் பிரபலம். படம் பார்ப்போரைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்கச் செய்வார். வடிவேலுவிடம் காணப்பட்ட உடல்மொழி அப்படியே ஏழுமலையிடம் இருந்தது.
பின்னாளில் தயாரிப்பாளராகி பல படங்களை தயாரித்தார். 1962ல் வெளியான 'எல்லோரும் வாழ வேண்டும்' என்ற படத்தை தயாரித்து நடித்தார். இதுதான் இவரது கடைசி படம். இந்த படம் அவர் மறைவுக்கு பிறகுதான் வெளிவந்தது.