என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

நகைச்சுவை நடிகர்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று வசனம் மூலமாக சிரிக்க வைப்பவர்கள், எம்.ஆர்.ராதா, தங்கவேலு, வி.கே.ராமசாமி முதல் விவேக் வரை இந்த வகையை சேர்ந்தவர்கள். இரண்டாவது வகை பாடி லேங்குவேஜ் எனப்படும் உடல்மொழியால் சிரிக்க வைப்பவர்கள். நாகேஷ், சுருளிராஜன் முதல் வடிவேலு வரை இந்த வகையை சேர்ந்தவர்கள்.
இந்த உடல்மொழி காமெடிக்கு முன்னோடி வி.எம்.ஏழுமலை. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுடன் நாடகங்களில் நடித்து வந்தவர் பின்னர் டவுன் பஸ், மிஸ்ஸியம்மா, மலைக்கள்ளன், மாயா பஜார், திகம்பர சாமியார், பொன்முடி, குணசுந்தரி, கடன் வாங்கி கல்யாணம், இல்லறமே நல்லறம், எல்லோரும் வாழ வேண்டும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். உடல் மொழி, குரல் மொழி இவரிடம் பிரபலம். படம் பார்ப்போரைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்கச் செய்வார். வடிவேலுவிடம் காணப்பட்ட உடல்மொழி அப்படியே ஏழுமலையிடம் இருந்தது.
பின்னாளில் தயாரிப்பாளராகி பல படங்களை தயாரித்தார். 1962ல் வெளியான 'எல்லோரும் வாழ வேண்டும்' என்ற படத்தை தயாரித்து நடித்தார். இதுதான் இவரது கடைசி படம். இந்த படம் அவர் மறைவுக்கு பிறகுதான் வெளிவந்தது.