பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

சென்னையில் நடந்த நடிகர் சங்க பொதுக்குழுவில் பேசிய நடிகர் வடிவேலு "இப்போது
பெரிய கலைஞர்கள் சின்ன கலைஞர்கள் என பார்க்காமல் யூடியூப்பில் தவறாக பேசுகிறார்கள். அண்ணன் நடிகர் சிவகுமார் குறித்தும் பேசினார். நடிகர் சங்கம் இருக்கிறதா என தெரியலை.அவங்களுக்கு ஆப்பு வைக்கணும்.
சில தயாரிப்பாளர்கள் மற்ற படம் ஓட கூடாது என பணம் கொடுத்து சிலரை பேச வைக்கிறார்கள். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்திலும் இதை செய்ய சிலர் இருக்கிறார்கள். கேரளாவில் இப்படி பேசினால் பிதுக்கிவிடுவார்கள். மசாலா போட்டு விடுவார்கள். இந்த விஷயத்தில் போர் கால நடவடிக்கைகள் எடுக்கணும் தவறாக பேசுபவர்கள் தூங்காமல் துடிக்கணும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கணும்.
இன்னும் சிலர் வாய் மீது மைக் வைத்து, கருத்து கேட்டு ஒரு படத்தை தவறாக பேசுகிறார்கள். படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்களிடம் இருந்து வார்த்தை புடுங்கி காசு பார்க்கிறார்கள். ஒரு 10 பேர் சினிமாவை அழிக்கிறார்கள். கேமரா பார்த்து சிலர் இப்படி பேசுகிறார்கள். அவர்கள் வார்த்தையை மாற்றுகிறார்கள். இந்த விஷயத்தில் தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கைகள் எடுக்கிறதோ இல்லையோ , நடிகர் சங்கம் எடுக்கணும் என்று நடிகர் சங்க பொதுக்குழுவில் நடிகர் வடிவேலு பேசினார்.
அதற்கு பதில் அளித்த நடிகர் சங்க துணைத்தலைவர் கருணாஸ், ''அண்ணன் கோரிக்கை ஏற்று அவர்கள் பிதுக்கப்படுவார்கள், மசாலா தடவப்படும்'' என்றார்.