2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! | ஜி.வி. பிரகாஷூக்கு மாமாவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் ஆண்டனி! | இரண்டாவது முறையாக பாலிவுட் இளம் நடிகருடன் இணையும் ராஷ்மிகா! |

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் "பாலிவுட் சினிமா மதச்சார்பு உடையதாக மாறிவிட்டது. கடந்த 8 ஆண்டுகளில் நடந்த அதிகார மாற்றத்தால் எனக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது" என கூறி இருந்தார். ரகுமானின் இந்த கருத்து சர்ச்சை ஆனது.
இதற்கு விளக்கம் அளித்த ரஹ்மான் ''யாரையும் புண்படுத்த வேண்டும் என நினைக்கவில்லை. நான் இந்தியனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்'' என தெரிவித்து இருந்தார். என்றாலும் ரஹ்மானுக்கு எதிரான விமர்சனங்கள் கடுமையாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ''தான் உணர்ந்த ஒரு விஷயத்தை அவர் பேசி இருக்கிறார். அது அவரது உரிமை. உங்களுக்கு வேறு கருத்து இருக்கலாம், ஆனால் அவர் பேசவே கூடாது என அவரது உரிமையை மறுக்க கூடாது. இது ஒரு கேரக்டர் அசாஸினேஷன். உலக அளவில் மதிக்கப்படும் ஒரு கலைஞரை அவமானப்படுத்துவது, நம்பிக்கை மீது கேள்வி எழுப்புவது எல்லாம் விமர்சனம் அல்ல. இதெல்லாம் வெறுப்பு பேச்சு” என பதிவிட்டு இருக்கிறார்.




