தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

'கல்லூரி', 'தென்மேற்குப் பருவக்காற்று', 'பரதேசி' உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் செழியன். இவர் இயக்கிய 'டூ லெட்' படம் பல விருதுகளை பெற்றது. திரைப்படம் தொடர்பான பல புத்தகங்களை எழுதியுள்ளார். தற்போது பிலிம் ஸ்கூல் என்ற திரைப்பட பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
அவரது திரைப்படப் பள்ளி மாணவர்கள் 34 பேர் 'வழித்துணை', 'சுழற்சி', 'மத்தி', 'உறுதுணை', 'அடவி', 'கிடை', 'சேவ் த கேட்', 'மயில', 'செல்போன்', 'அருகன்', 'கிடை', 'லகடு', 'ரைடர்', 'குடை வள்ளல்', 'மியாவ்', 'நேற்றைய நிலா', 'தணல்', 'வார் கிட்ஸ்', 'தாழ்', 'கூடு', 'பசி', 'தீவிரவாதி', 'கண்ணாயிரம்', 'ஓட்டம்', 'தம்மம்' 'பழகு', 'மோகன மதில்', 'நிசப்தம்', 'கடைசி எல்லை', 'மௌனி', 'தாழ்' என 34 சுயாதீன படங்களை இயக்க உள்ளனர்..
இந்தப் படங்கள் மற்றும் இயக்குனர்களின் அறிமுக விழா வருகிற 24ம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்த விழாவில் ஒளிப்பதிவாளர்கள் பி. சி. ஸ்ரீராம், ரவிவர்மன், எடிட்டர்கள் பி. லெனின், ஶ்ரீகர் பிரசாத், எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியின் தலைவர் டிராட்ஸ்கி மருது உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.




