Advertisement

சிறப்புச்செய்திகள்

2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! | ஜி.வி. பிரகாஷூக்கு மாமாவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் ஆண்டனி! | இரண்டாவது முறையாக பாலிவுட் இளம் நடிகருடன் இணையும் ராஷ்மிகா! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூரி சொன்ன 'மண்டாடி' கதை

21 ஜன, 2026 - 03:31 IST
எழுத்தின் அளவு:
The-story-of-Mandadi-told-by-Soori
Advertisement

சூரி தற்போது நடித்து வரும் படம் 'மண்டாடி'. மீனவர்களின் வாழ்க்கை பின்னணியில் உருவாகி வரும் இந்த படத்தைப் பற்றி சூரி கூறி இருப்பதாவது:

ஜல்லிக்கட்டு போன்று தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு தான் படகு போட்டி. மீனவ மக்களின் பண்பாட்டு அடையாளமாகவே இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. அங்கே எந்த ஒரு விழாவா இருந்தாலும் ஹைலைட்டா இந்த படகுப் போட்டியை நடத்துவாங்க. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் பாய்மரப் படகுப் போட்டி நடைபெறுகிறது. 150-லிருந்து 200 படகுகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், 20 கடல் மைல் தொலைவுல பாய்மரப் படகுகள்ல ரேஸ்கள் நடக்கும். நடுக்கடல்ல 20 மைல்களுக்கு அப்பால கொடியோட சில எல்லைப் படகுகளை நிறுத்தி வெச்சிருப்பாங்க.

நம்ம படகு அந்த எல்லைப் படகைப் போய் சுத்திட்டு, திரும்பவும் கரைக்கு வர்றதை ஊரே கூடி நின்னு கொண்டாடும். மூணு மணி நேரத்துக்கு மேல நடக்கும் இந்தப் போட்டி சாதாரணமானது கிடையாது. திரும்பி வரும்போது நாம உசுரோட வரணும். ஏன்னா, பல போட்டுகள் கடல்ல கவுந்துடும். இல்லைன்னா, பாதிப் பேருக்கு காயம் ஏற்பட்டுரும். சுருக்கமா சொன்னா இது மனுஷனுக்கும் இயற்கைக்கும் நடக்குற போட்டினுகூடச் சொல்லலாம். இந்த ரேஸ்ல மனிதனோட சூழ்ச்சியையும் வெல்லணும். அதே சமயத்துல கடல்ல அடிக்கும் காற்றையும் வெல்லணும். இப்படிச் சவால்கள் நிறைஞ்சதுதான் இந்தப் போட்டி.

ஒரு அணியில் ஆறு பேர் இடம் பெறுவார்கள். இந்த அணியின் கேப்டன் தான் மண்டாடி என்று அழைக்கப்படுபவர் கேப்டன்தான் கடலின் நீர் வாடையைச் சரியா கணிக்க முடியும். அடிக்கும் காத்துல, படகை எந்தத் திசையில செலுத்தணும்னு எல்லாம் தெரிஞ்சவர் படகோட கேப்டன். படகுப் போட்டியில் ஈடுபடும் மீனவர்கள், அவங்களோட வாழ்க்கை, போராட்டம், ஈடு இணையில்லா அன்பு, போட்டினு எல்லாத்தையும் சொல்லும் படமாக 'மண்டாடி' உருவாகி வருகிறது.

இவ்வாறு சூரி கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம்தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : ... ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? ஜனநாயகன் சென்சார் விவகாரம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap