25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி | சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் |
தமிழ் சினிமாவில் வடிவேலு, பார்த்திபன் கூட்டணிக்கு வரவேற்பு உண்டு. இருவரும் இணைந்தால் வெடி சிரிப்புதான். அதேபோல், வடிவேலு, பிரபுதேவா இணைந்து நடித்த படங்களும் ஒரு காலத்தில் பேசப்பட்டன. குறிப்பாக, ‛காதலன், மனதை திருடிவிட்டாய், ராசையா, லவ்பேர்ட்ஸ், எங்கள் அண்ணா' படங்களின் காமெடி இன்றும் பிரபலம். இப்போது கண்ணன் ரவியின் தயாரிப்பில், பிரபுதேவா, வடிவேலு 25 ஆண்டுகளுக்குபின் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை சாம் இயக்குகிறார்.
முன்போல இந்த கூட்டணி வெற்றி பெறுமா என்று விசாரித்தால், கடந்த சில ஆண்டுகளாக பிரபுதேவா ஹீரோவாக நடித்த பல படங்கள் ஓடவில்லை. அவர் நடித்த சில படங்கள் ரிலீஸ் ஆகாமல் இருக்கின்றன. வடிவேலுவும் ரீ என்ட்ரியில் ஜெயிக்கவில்லை. அந்த காலத்தில் நடிகர்கள் மட்டுமல்ல, காமெடி டிராக் எழுத பல திறமைசாலி எழுத்தாளர்கள் இருந்தார்கள். இப்போது காமெடியை இயக்குனர்களே எழுதுவதால் அது வொர்க் அவுட் ஆவதில்லை. வடிவேலுவும் இயக்குனர் சுதந்திரத்தில் நிறைய தலையிடுகிறார். நிறைய டயலாக்குகளை மாற்ற சொல்கிறார் என கூறப்படுகிறது. பிரபுதேவாவுக்கும் வயதாகிவிட்டது. ஆகவே படம் வந்து, காமெடி ஹிட்டானால்தான் எதுவும் பேச முடியும் என்கிறார்கள்.