கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? |

தமிழில் ஏஸ், மதராஸி படங்களில் நடித்த ருக்மணி வசந்த், தற்போது திரைக்கு வந்துள்ள ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சாப்டர் 1 படத்திலும் நாயகியாக நடித்திருக்கிறார். இதையடுத்து யஷ் நடித்து வரும் டாக்ஸிக், என்டிஆரின் டிராகன் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.
அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛கிரஷ் என்று அழைக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் நான் அதைப் பற்றி அதிகமாக யோசிக்கவில்லை. காரணம் அத்தகைய பாராட்டு தற்காலிகமானது என்று நம்புகிறேன். காலப் போக்கில் அது மாறிவிடுகிறது. ஆனால் நான் ஒரு விஷயத்தில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பலர் இன்னும் என்னை பிரியா என்று அழைக்கிறார்கள். கன்னடத்தில், சப்தா சாகர தாட்சே எல்லோவில் நான் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் அது. அந்த வேடத்தில் நடிக்கும் போது ரொம்பவே பயந்தேன். ஆனால் அந்த எளிமையான கதாபாத்திரத்தை ரசிகர்கள் ரசிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியிருக்கும் ருக்மணி வசந்த், எதிர்காலத்தில் காதல், நகைச்சுவை கலந்த கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.




