உதய்ப்பூர் சென்றடைந்த திருமண ஜோடி விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | கணவன், மனைவி மோதிக் கொள்ளும் பிப்ரவரி 27 வெளியீடுகள் | 47 வருடங்களுக்குப் பிறகு கூட்டணி : எதையும் 'ஷேர்' செய்யாத ரஜினிகாந்த் | தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: புதிய தலைவராகும் ஜி.கே.எம். தமிழ்குமரன் | மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்! | சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா | பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! | ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! | 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு |

மான்ஸ்டர் படம் மூலம் காமெடி கதாநாயகனாக ரசிகர்கள் மத்தியில் தனது மீள் வரவை உறுதி செய்த நடிகர் எஸ்ஜே சூர்யா, சமீபத்தில் வெளியான மாநாடு படத்தில் காமெடி கலந்த வில்லனாகவும் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் அந்தவகையில் தற்போது சிபி சக்கரவர்த்தி டைரக்ஷனில் சிவகார்த்திகேயன் டான் படத்தில் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஏற்கனவே இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட நிலையில் தற்போது இந்தப்படத்தில் தனது டப்பிங் பணிகளையும் முடித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. இயக்குனர் சிபி சக்ரவர்த்தியும் எஸ்'ஜே.சூர்யாவும் இந்த தகவலை தெரிவித்துள்ளதுடன் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் தங்களது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தில் பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். கல்லூரி பின்னணி கொண்ட கதைக்களத்தில் இந்தப்படம் உருவாகியுள்ளது.