'கருப்பு' ஒளிப்பதிவாளருக்கு கார் பரிசளித்த சூர்யா | மீண்டும் நடிக்க வந்தார் ரவி மோகன் | 'ஜனநாயகன்' பிரச்னை.. எனக்கு சொல்ல தைரியமில்லை: எச்.வினோத் ஓபன் டாக் | பிளாஷ்பேக்: வியாபார போட்டியில் வென்று, வியப்பில் ஆழ்த்திய ஏ வி மெய்யப்ப செட்டியார் | ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள்?: ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன பதில் | விமர்சனங்களால் பிக்அப் ஆகும் 'பிளாஸ்ட்' | ''சென்னை என் தாய்வீடு'': ராம்சரண் பேச்சு | நான் நடந்தால், பேசினால் சாதனைதான்: சிம்பொனி நிகழ்ச்சியில் இளையராஜா | ஸ்ரீதேவியுடன் நடித்தேன், அவர் மகளுடனும் நடித்து விட்டேன் : ரவிகிஷன் பெருமிதம் | ஸ்பை திரில்லரான 'ஆல்பா' படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ஆலியா பட் |

தமிழ்த் திரையுலகத்தின் இரு பெரும் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த். கதாநாயகர்களாக ஒரே காலகட்டத்தில் வளர்ந்தவர்கள். சில படங்களில் இணைந்து நடித்த பின் தனித்தனி கதாநாயகர்களாக நடிப்பது என பேசி அதன்பின் சேர்ந்து நடிப்பதை கறாராகத் தவிர்த்தவர்கள்.
47 வருடங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. இந்தியத் திரையுலகமே இவர்கள் இணைந்து நடிப்பதை ஆச்சரியம், அதிசயத்துடன் வரவேற்றுள்ளது.
தனது நண்பர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பது குறித்து படத்தின் அறிவிப்பு வீடியோவைப் பகிர்ந்து கமல்ஹாசன், “எனது நண்பர் ரஜினிகாந்துடன் ஒரு சிறப்பான ரியூனியன். ஒவ்வொரு சிறந்த பயணமும் இன்னொரு அத்தியாயத்திற்குத் தகுதியானது,” என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் விதத்திலும் அல்லது அறிவிப்பு வீடியோவைப் பகிர்ந்தும் ரஜினிகாந்தும் எக்ஸ் தளத்தில் ஏதாவது பதிவு செய்வார் என்று இரண்டு நாட்களாகக் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 'படையப்பா' படத்தின் ரிரிலீஸ் குறித்து கூட பதிவிட்டிருந்தார் ரஜினிகாந்த். அதற்கு முன்பு 2022ல் 'பாபா' ரீரிலீஸ், அதற்கும் முன்பாக 2017 மற்றும் 2016ல் '2.0' குறித்தும், 2015ல் 'கபாலி' படப்பிடிப்பு ஆரம்பம் குறித்தும் பதிவிட்டுள்ளார்.
கமல்ஹாசன் குறிப்பிட்டது போல, இந்த 'சிறப்பான ரியூனியன்' குறித்து சமூக வலைத்தளங்களில் ரஜினிகாந்த் இதுவரை எதுவுமே பதிவிடவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.




