வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? | இசை ஆல்பம் இயக்கிய ஷாம் | நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை : மற்ற 6 பேர் குற்றவாளி என தீர்ப்பு |

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கிர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடிப்பில் இந்த வாரம் டிசம்பர் 12ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள படம் 'வா வாத்தியார்'. இந்தப் படத்தை வெளியிட, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.
இன்று டிசம்பர் 8 இந்த இடைக்காலத் தடை குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. செலுத்த வேண்டிய சுமார் 21 கோடி ரூபாயை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் செலுத்தி தடையை நீக்கும் உத்தரவைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் எழுந்துள்ளது. நீதிமன்ற விசாரணைக்குப் பிறகே இது முடிவாகும்.
இதனிடையே, இன்று மாலை சென்னையில் இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வை நடத்த உள்ளார்கள். அதற்கான அழைப்புகள் மீடியா உட்பட அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.