சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
நடிகர் ஜெயம் ரவி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் கதையின் நாயகனான பொன்னியின் செல்வனாக அருள்மொழி வர்மன் வேடத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார். இந்த பட வெளியீட்டிற்கு முன்பு பல ஊர்களுக்கு சுற்றி புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வந்தார். படம் வெளியாகி மூன்று வாரங்களை கடந்து பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை கொட்டியது.
இந்நிலையில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவு : ‛‛எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. உடனடியாக என்னை தனிமைப்படுத்தி அனைத்து கொரோனா விதிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தேவைப்பட்டால் தங்களை பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள்'' என்றார்.