மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்க இருந்த படம் 'கொரோனா குமார்'. இந்த நிறுவனம் தயாரித்த 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்த சிம்பு இந்த படத்தில் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு அவருக்கு 4 கோடியே 50 லட்சம் முன்பணமாக கொடுக்கப்பட்டது. பணத்தை பெற்றுக் கொண்ட சிம்பு நடிக்க வராமல் தாமதம் செய்தார். இதனால் அந்த படம் கைவிடப்பட்டது.
இதை தொடர்ந்து சிம்புக்கு கொடுக்கப்பட்ட பணத்தை திருப்பித்தர கோரியும், வேறு படங்களில் அவர் நடிக்க தடைவிதிக்க கோரியும் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாத தொகை செலுத்த சிலம்பரசனுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை தொடர்ந்து சிம்பு தரப்பில் ஒரு கோடி டெபாசிட் செய்யப்பட்டது. பின்னர், சிம்பு மற்றும் வேல்ஸ் பிலிம்ஸ் பட நிறுவன பிரச்னைக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதி கே.கண்ணனை மத்தியஸ்தராக நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது, சிம்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்தியஸ்தர் முன் உள்ள வழக்கை இரு தரப்பினரும் திரும்பப் பெற்று விட்டதால், நடிகர் சிம்பு தரப்பில் டெபாசிட் செய்யப்பட்ட ஒரு கோடி ரூபாயை வட்டியுடன் சேர்த்து திருப்பித்தர உத்தரவிட வேண்டும் எனக் கோரினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், டெபாசிட் தொகையை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை முடித்து வைத்தது.