அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் | இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் |

தமிழ்நாட்டில் பிறந்தாலும் தற்போது சர்வதே திரைப்பட இசை அமைப்பாளராக இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஹாலிவுட் படங்களுக்கு இசை அமைப்பதன் மூலம் ஆஸ்கர் விருதுகளை வென்று உலக புகழ் பெற்றுள்ளார். இதனால் சர்வதேச அளவில் பல பொறுப்புகள் அவரை தேடி வருகிறது.
அந்த வரிசையில் ஏ.ஆ.ரஹ்மானுக்கு இங்கிலாந்தில் உயரிய கவுரவம் கிடைத்துள்ளது. லண்டனில் உள்ள உலக புகழ்பெற்ற இசை நாடகம் மற்றும் சமகால நடனத்துக்கான கன்சர்வேட்டரியான டிரினிட்டி லாபான் இசைப்பள்ளியின் கவுரவத் தலைவராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த பதவியில் அவர் ஐந்து ஆண்டுகள் பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறும்போது ''இந்த பொறுப்பை பாக்கியமாகவும், மரியாதைக்குரியதாகவும் கருதுகிறேன். இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்குமான உறவை வலுப்படுத்துவதில் நான் ஒரு காரணியாக இருப்பதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்”என்று தெரிவித்து உள்ளார்.