'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு | மோகன்லாலுக்கு விருது கிடைத்ததை கொண்டாடிய திரிஷ்யம் படக்குழு | 8 மாதங்களுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பும் மம்முட்டி | 'ஜெய் ஹனுமான்' படம் : ரிஷப் ஷெட்டி தந்த அப்டேட் | 'குட் பேட் அக்லி' மற்றும் 'ஓஜி' ஒரே கதையா : இயக்குனர் பதில் | அடுத்து ஒரே ஒரு பெரிய ரிலீஸ் மட்டுமே… | பிளாஷ்பேக் : ரஜினிகாந்துக்கு எழுதிய கதையில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக்: ஹீரோவாக நடித்த ஏ.பி.நாகராஜன் | ஏஐ வீடியோக்கள், ஆபாச தளம் : டில்லி உயர்நீதி மன்றத்தில் நாகார்ஜுனா வழக்கு |
தமிழ்நாட்டில் பிறந்தாலும் தற்போது சர்வதே திரைப்பட இசை அமைப்பாளராக இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஹாலிவுட் படங்களுக்கு இசை அமைப்பதன் மூலம் ஆஸ்கர் விருதுகளை வென்று உலக புகழ் பெற்றுள்ளார். இதனால் சர்வதேச அளவில் பல பொறுப்புகள் அவரை தேடி வருகிறது.
அந்த வரிசையில் ஏ.ஆ.ரஹ்மானுக்கு இங்கிலாந்தில் உயரிய கவுரவம் கிடைத்துள்ளது. லண்டனில் உள்ள உலக புகழ்பெற்ற இசை நாடகம் மற்றும் சமகால நடனத்துக்கான கன்சர்வேட்டரியான டிரினிட்டி லாபான் இசைப்பள்ளியின் கவுரவத் தலைவராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த பதவியில் அவர் ஐந்து ஆண்டுகள் பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறும்போது ''இந்த பொறுப்பை பாக்கியமாகவும், மரியாதைக்குரியதாகவும் கருதுகிறேன். இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்குமான உறவை வலுப்படுத்துவதில் நான் ஒரு காரணியாக இருப்பதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்”என்று தெரிவித்து உள்ளார்.