ஜன. 30ல் திரைக்கு வரும் ‛தலைவர் தம்பி தலைமையில்' | 'பாபு, ஏய்' படங்களின் 'உல்டா' தான் 'பகவந்த் கேசரி', அதன் ரீமேக் தான் 'ஜனநாயகன்' | பிப்ரவரி முதல் கல்கி 2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் | திரிஷ்யம் 3 ரிலீஸ் எப்போது : இயக்குனர் தகவல் | ரன்வீர் சிங் ஜோடியாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்தின் டீசர் ஜனவரி 9ல் ரிலீஸ் | ரேஸின் போது அஜித்தை சந்தித்தது ஏன் : ஸ்ரீலீலா பதில் | ரிலீஸ் அறிவிக்கப்பட்ட தேதியில் தீர்ப்பு; 'ஜனநாயகன்' ஜன.9ல் வெளியாகுமா? | சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி ரீ ரிலீஸ் ஆகிறது | 22 வருடங்களுக்கு முன்பு தான் நடித்த கதாபாத்திரத்தில் இப்போது கேமியோவாக நடிக்கும் மம்முட்டி |

கோவை மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் ஜோசப் பேபி என்பவர் தமிழக அரசியலில் நேர்மையாக வாழ்ந்து மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து, அதில் அவர் கக்கனாக நடித்தும் இருக்கிறார். அவரே திரைக்கதை, வசனத்தையும் எழதியிருக்கிறார். ஏ.எஸ்.சந்தோஷ்ராமா இயக்கி உள்ளார். தேவா இசை அமைத்துள்ளார்.
இதுகுறித்து ஜோசப் பேபி கூறியதாவது : கக்கன் மீது மாறாத பற்று கொண்டவன் நான். அவரது வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்க வேண்டும் என்பதாற்காக கடந்த 30 வருடங்களாக பணம் சேர்த்து வந்தேன். பிரபல நடிகர்கள் நடித்தால் அவர்கள் முகம்தான் தெரியும், கக்கன் பின்னனுக்கு தள்ளப்படுவார் என்பதால் நானே கக்ககான நடித்தேன். எல்லா பணிகளையும் நானே செய்ய முடியாது என்பதால் இயக்கும் பொறுப்பை இன்னொருவருக்கு கொடுத்தேன்.
இன்றைய தலைமுறையினருக்கு கக்கன் பற்றித் தெரியாது. இந்த படத்திற்கு பிறகு அவரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வார்கள். அரசியலுக்கு வரும் ஆசை ஏற்பட்டால் அவரையே முன்மாதிரியாக கொள்வார்கள். படத்தை விரைவில் வெளியிட இருக்கிறேன். இதில் கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதியை கக்கன் குடும்பத்திற்கு வழங்க இருக்கிறேன். என்றார்.