சவுந்தர்யா பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படும் பிரியங்கா மோகன் | சிம்பு, தனுஷ் மோதல் இருக்கிறதா : சமுத்திரக்கனி பதில் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் ‛ரணபலி' படத்தின் முதல் பாடல் வெளியானது | துரந்தர் 2 படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்ட யாமி கவுதம் | மார்ச் 6ல் ஜீ5 ஓடிடியில் வெளியாகும் காந்தி டாக்ஸ் | பிரதமர் மோடியுடன் சந்திப்பு குறித்து ராஷ்மிகா நெகிழ்ச்சி | ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' : ஆரம்பமானதன் வரலாறு… | அதிக லைக்குகள் பெற்ற ராஷ்மிகா திருமணப் பதிவு | தென்னிந்திய இயக்குனரை தேடும் ஹிருத்திக் ரோஷன் | ரோஸ்லின் வெப் சீரிஸுக்காக எடையை குறைத்த மீனா |

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் எஸ்.தாணு. இவரது வி கிரியேஷன் அலுவலகம் தி.நகர் பிரகாசம் சாலையில் உள்ளது. சில இளைஞர்களும், பெண்களும் வி கிரியேஷன் அலுவலத்திற்கு சென்று அதன் இணை இயக்குனர் ஜெகதீசனை சந்தித்து எங்களுக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பணம் வாங்கினீர்கள், ஆனால் பல மாதங்களாக எங்களை அழைக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
இதை கேட்டு அதர்ச்சி அடைந்த ஜெகதீசன் எங்கள் நிறுவனம் சார்பில் எந்த படத்திற்கும் நடிகர், நடிகை தேர்வு நடத்தவில்லை, இதற்காக எந்த விளம்பரமும் செய்யவில்லை என்றார். இதை தொடர்ந்து வந்தவர்களின் பணம் பெற்ற நபர்களின் பெயர், தொலைபேசி எண் ஆகியவற்றுடன் ஜெகதீசன் தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வி கிரியேஷன் பெயரில் போலியான விளம்பரம் செய்து இதுபோன்று பல நபர்களிடம் ஒரு கும்பல் பணமோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற நபர்களிடம் ஏமாற வேண்டாம் என்றும், யாராவது எங்கள் நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு பேசினால் தகவல் தெரிவிக்குமாறும் வி கிரியேஷன் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.