சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படம் பான் இந்தியா படமாக தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகி உள்ளது.
ஹிந்தியில் 'விக்ரம் வேதா' படமும், கன்னடத்தில் 'கண்டாரா' படமும் இப்படத்திற்குப் போட்டியாக உள்ளன. அதே சமயம் 'விக்ரம் வேதா' படத்திற்கு 'பொன்னியின் செல்வன்' படத்தின் கதாநாயகர்களான கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கார்த்தி நேற்றும், ஜெயம் ரவி இன்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கு 'விக்ரம் வேதா' படத்தின் இயக்குனர்களாக புஷ்கர், காயத்ரி நன்றி தெரிவித்து, “பொன்னியின் செல்வன்' படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ் சினிமா உலகத்தைச் சேர்ந்த புஷ்கர் காயத்ரி தமிழில் இயக்கிய 'விக்ரம் வேதா' படத்தை அதே பெயரில் தெலுங்கிலும் இயக்கியுள்ளார்கள். இப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தாலும் இன்னும் வசூல் ரீதியாக பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.