ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படம் பான் இந்தியா படமாக தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகி உள்ளது.
ஹிந்தியில் 'விக்ரம் வேதா' படமும், கன்னடத்தில் 'கண்டாரா' படமும் இப்படத்திற்குப் போட்டியாக உள்ளன. அதே சமயம் 'விக்ரம் வேதா' படத்திற்கு 'பொன்னியின் செல்வன்' படத்தின் கதாநாயகர்களான கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கார்த்தி நேற்றும், ஜெயம் ரவி இன்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கு 'விக்ரம் வேதா' படத்தின் இயக்குனர்களாக புஷ்கர், காயத்ரி நன்றி தெரிவித்து, “பொன்னியின் செல்வன்' படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ் சினிமா உலகத்தைச் சேர்ந்த புஷ்கர் காயத்ரி தமிழில் இயக்கிய 'விக்ரம் வேதா' படத்தை அதே பெயரில் தெலுங்கிலும் இயக்கியுள்ளார்கள். இப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தாலும் இன்னும் வசூல் ரீதியாக பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.