தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி, அதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியானது. மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து பட குழுவினர் சென்னை, ஐதராபாத், மும்பை, கொச்சி உள்ளிட்ட இடங்களில் இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். இந்த நிலையில் தற்போது பெங்களூருவில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றபோது அதில் பேசிய ஜெயம் ரவி, அங்கு கிடைத்த ரசிகர்களின் வரவேற்பை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு சில நொடிகள் கண் கலங்கினார்.
இதைத் தொடர்ந்து அருகில் இருந்த கார்த்தி, விக்ரம், திரிஷா ஆகியோர் ஜெயம் ரவியை தேற்றி ஆசுவாசப்படுத்தினர். இதற்கு முன்னதாக ஜெயம் ரவிக்கு தனி ஒருவன் படத்தில் நடித்தபோது மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. அடுத்தடுத்து அவர் பல படங்களில் நடித்திருந்தாலும், இந்த பொன்னியின் செல்வன் படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் இவர் நடித்து அதற்கு ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை நேரில் கண்கூடாக கண்டபோது தன்னையும் அறியாமல் மனம் நெகிழ்ந்து கண்கலங்கி விட்டாராம் ஜெயம் ரவி.