சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி, அதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியானது. மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து பட குழுவினர் சென்னை, ஐதராபாத், மும்பை, கொச்சி உள்ளிட்ட இடங்களில் இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். இந்த நிலையில் தற்போது பெங்களூருவில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றபோது அதில் பேசிய ஜெயம் ரவி, அங்கு கிடைத்த ரசிகர்களின் வரவேற்பை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு சில நொடிகள் கண் கலங்கினார்.
இதைத் தொடர்ந்து அருகில் இருந்த கார்த்தி, விக்ரம், திரிஷா ஆகியோர் ஜெயம் ரவியை தேற்றி ஆசுவாசப்படுத்தினர். இதற்கு முன்னதாக ஜெயம் ரவிக்கு தனி ஒருவன் படத்தில் நடித்தபோது மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. அடுத்தடுத்து அவர் பல படங்களில் நடித்திருந்தாலும், இந்த பொன்னியின் செல்வன் படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் இவர் நடித்து அதற்கு ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை நேரில் கண்கூடாக கண்டபோது தன்னையும் அறியாமல் மனம் நெகிழ்ந்து கண்கலங்கி விட்டாராம் ஜெயம் ரவி.