உண்மை எப்போதும் வெல்லும் : ஆர்த்தி பதிவு; குஷ்பு ஆதரவு | விஜய் அண்ணாவுக்கு நிறைய சவால்கள் இருக்கிறது : சவுந்தர்யா ரஜினி | என் மனைவியை காப்பாற்றுங்க : முதல்வர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை வேண்டுகோள் | விவாகரத்து வரை சினிமாவிற்கு முழுக்கு, என் குடும்பத்தை கெடுத்தவர் மூன்றெழுத்து நடிகை : ரவி மோகன் கண்ணீர் பேட்டி | 'ஜனநாயகன்' படத்தை கசிய விட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது | ஒன்றிணைந்து பேசுவோம் : திரையுலகினருக்கு கமல்ஹாசன் அழைப்பு | ரவி மோகனை பிரிந்தார் கெனிஷா : சென்னையை விட்டும் வெளியேறினார் | தேவர் மகன் வீட்டில் படமாக்கப்பட்ட மலையாளப் படம் 'தேவர்' | உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை | 30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா |

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி, அதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியானது. மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து பட குழுவினர் சென்னை, ஐதராபாத், மும்பை, கொச்சி உள்ளிட்ட இடங்களில் இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். இந்த நிலையில் தற்போது பெங்களூருவில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றபோது அதில் பேசிய ஜெயம் ரவி, அங்கு கிடைத்த ரசிகர்களின் வரவேற்பை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு சில நொடிகள் கண் கலங்கினார்.
இதைத் தொடர்ந்து அருகில் இருந்த கார்த்தி, விக்ரம், திரிஷா ஆகியோர் ஜெயம் ரவியை தேற்றி ஆசுவாசப்படுத்தினர். இதற்கு முன்னதாக ஜெயம் ரவிக்கு தனி ஒருவன் படத்தில் நடித்தபோது மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. அடுத்தடுத்து அவர் பல படங்களில் நடித்திருந்தாலும், இந்த பொன்னியின் செல்வன் படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் இவர் நடித்து அதற்கு ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை நேரில் கண்கூடாக கண்டபோது தன்னையும் அறியாமல் மனம் நெகிழ்ந்து கண்கலங்கி விட்டாராம் ஜெயம் ரவி.