டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | வதந்தி பரப்பாதீங்க - அஸ்வத் மாரிமுத்து | எம்புரான் படத்தில் பஹத் பாசில் இல்லை ; பிரித்விராஜ் திட்டவட்டம் | தினசரி வாடகைக்கு விடப்படும் மம்முட்டி வீடு : வாய்பிளக்க வைக்கும் வாடகை | ஜனநாயகன் படத்தின் வியாபாரம் தொடங்கியது | தவறை உணர்ந்தேன் : மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ் | தனுஷின் இட்லி கடை ஏப்ரல் 10ல் வெளியாகாது : தயாரிப்பாளர் தகவல் | கோடை கொண்டாட்டத்தில் எத்தனை படங்கள் ரிலீஸ்? | சீதையாக நடிப்பதால் 'எல்லம்மா' படத்திலிருந்து விலகிய சாய்பல்லவி | பிளாஷ்பேக் : ஹிந்தி, தமிழில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை |
அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி, அதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியானது. மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து பட குழுவினர் சென்னை, ஐதராபாத், மும்பை, கொச்சி உள்ளிட்ட இடங்களில் இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். இந்த நிலையில் தற்போது பெங்களூருவில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றபோது அதில் பேசிய ஜெயம் ரவி, அங்கு கிடைத்த ரசிகர்களின் வரவேற்பை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு சில நொடிகள் கண் கலங்கினார்.
இதைத் தொடர்ந்து அருகில் இருந்த கார்த்தி, விக்ரம், திரிஷா ஆகியோர் ஜெயம் ரவியை தேற்றி ஆசுவாசப்படுத்தினர். இதற்கு முன்னதாக ஜெயம் ரவிக்கு தனி ஒருவன் படத்தில் நடித்தபோது மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. அடுத்தடுத்து அவர் பல படங்களில் நடித்திருந்தாலும், இந்த பொன்னியின் செல்வன் படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் இவர் நடித்து அதற்கு ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை நேரில் கண்கூடாக கண்டபோது தன்னையும் அறியாமல் மனம் நெகிழ்ந்து கண்கலங்கி விட்டாராம் ஜெயம் ரவி.