ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சின்னத்திரை பிரபலங்கள் சம்யுக்தாவும், விஷ்ணுகாந்தும் ஒருவரையொருவர் மாறி மாறி சோஷியல் மீடியாவில் குறை சொல்லி வருகின்றனர். அதற்கேற்றார் போல் நெட்டிசன்களில் சிலர் சம்யுக்தாவிற்கும் சிலர் விஷ்ணுகாந்திற்கும் ஆதரவாக நிலைபாடு எடுத்துள்ளனர். இந்நிலையில், அண்மையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள சம்யுக்தா தனக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு நன்றி சொல்லி நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். அவர் அந்த பதிவில், 'இதற்கு முன்னால் நான் நடித்த கதாபாத்திரங்களுக்காக என் மீது அன்பு செலுத்தினீர்கள். ஆனால், இன்று தனிப்பட்ட முறையில் என் மீது அன்பு காட்டுகிறீர்கள். என்னை உங்கள் சகோதரியாக நடத்துகிறீர்கள். நான் உங்களுக்கு கடமை பட்டிருக்கிறேன். நான் உயிரோடு இருப்பதற்கு தகுதி உள்ளவள் என்று நினைப்பதற்கு நீங்களே காரணம். என்னை அப்படியே ஏற்றுக்கொண்டதற்கு நன்றி!' என்று கூறியுள்ளார்.