'ஜனநாயகன், டாக்சிக்' : அடுத்தடுத்த சர்ச்சையில் தயாரிப்பு நிறுவனம் | அவதூறு பரப்பும் விஜய் ரசிகர்கள்! - சாடிய இயக்குனர் சுதா கொங்கரா | அல்லு அர்ஜூனின் 23வது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்; அறிவிப்பு வெளியானது | பராசக்தி என் நடிப்புக்கான முழுமையான அங்கீகாரத்தை கொடுத்து விட்டது! -ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | தனுஷ் 54வது படத்தின் புதிய அப்டேட்: நாளை பொங்கல் தினத்தில் வெளியாகிறது! | பொங்கல் பண்டிகையை தித்திப்பாக்கும்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | மீண்டும் இணைந்த 'தகராறு' கூட்டணி! | சம்மர் 2026ல் ரிலீஸ்: உறுதிப்படுத்திய அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் படம்! | 2 நாட்களில் ரூ.120 கோடி வசூலைக் கடந்த 'மன ஷங்கர வர பிரசாத் காரு' படம் | தமிழில் பேச முயற்சிக்கும் ஸ்ரீலீலா |

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதலை துவங்கியது. இதற்கு நாடு முழுக்க ஆதரவு பெருகியது. தற்போது இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் தேசிய பாதுகாப்பு நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்குவதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் இளையராஜா வெளியிட்ட பதிவில், ‛‛பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் கொன்றதை எதிர்த்து நமது வீரர்கள் எல்லைகளில் துணிச்சல் மற்றும் உறுதியுடன் செயல்படுகின்றனர். நமது தன்னலமற்ற வீரர்கள், எதிரிகளை மண்டியிடச் செய்வார்கள் என்று நான் மிகவும் நம்புகிறேன். பெருமைமிக்க இந்தியனாகவும், எம்பி.,யாகவும், பயங்கரவாதத்தை ஒழிக்கவும், நமது எல்லைகளையும் மக்களையும் பாதுகாக்கவும் நமது நாட்டின் துணிச்சலான ஹீரோக்களின் வீரம் முயற்சிகளுக்காக, எனது இசை நிகழ்ச்சி கட்டணம் மற்றும் ஒரு மாத சம்பளத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளேன்''. ஜெய் ஹிந்த்!
இவ்வாறு இளையராஜா அறிக்கையில் கூறியுள்ளார்.