என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
சுந்தரி என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் கேப்ரில்லா செல்லஸ். சினிமாவில் ஐரா, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கேமராமேன் சுருளி என்பவரை திருமணம் செய்து கொண்ட கேப்ரில்லாவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் இன்று அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அதையடுத்து குழந்தையின் கையை பிடித்தபடி ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ளார்.
அதோடு, அவர் வெளியிட்டுள்ள பதிவில், உனது அழுகை எனது வலிக்கும் நிம்மதிக்கும் மருந்தாக்கியவளே, இவ்வுலகம் உனக்கானது மகளே. மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி. அவர்கள் இன்றி சுகப்பிரசவம் சாத்தியமில்லை. எனக்கு அன்பு கொட்டி கொடுக்கும் மக்களின் பிரார்த்தனைக்கும் உயிர் கலந்த நன்றிகள். இந்த தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் என்னுடைய சகோதரிகள் அனைவருக்கும் இந்த தருணம் அமைய வேண்டும் என்பதை எனது முதல் பிரார்த்தனையாக இறைவனிடமும் விதியிடமும் வேண்டிக் கொள்கிறேன். இப்படிக்கு கேப்ரில்லா...'' என்று அவர் பதிவிட்டுள்ளார்.