தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி |
பிரபல நடிகை காஜல் பசுபதி தன்னை நம்ப வைத்து ஏமாற்றிய இயக்குநரை சோஷியல் மீடியாவில் அம்பலப்படுத்தி கிழித்தெடுத்துள்ளார். சினிமா மற்றும் சின்னத்திரையில் கிடைக்கும் வாய்ப்புகளில் காஜல் பசுபதி நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் அண்மையில் நடித்து முடித்த ஒரு ப்ராஜெக்ட்டில் காஜல் பசுபதிக்கு சம்பளத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். அதை காஜல் கேட்டபோது அவரது பெயரை டேமேஜ் செய்யும் வகையில், காஜல் ஷூட்டிங் ஸ்பாட்டில் குடித்து விட்டு கலாட்டா செய்ததாக கூறியுள்ளனர். இதனால் கடுப்பான காஜல் பசுபதி தற்போது அந்த இயக்குநரை தனது சோஷியல் மீடியாக்களில் கிழித்தெடுத்து வருகிறார். 'பேய்மெண்ட் கொடுக்க வக்கு இல்லன்னா கூட விட்டுடலாம். ஆனா நான் பண்ணாத சொல்லி என் இமேஜ் ஸ்பாயில் பண்ணி என் கேரியர கெடுக்கு நினைக்கிற எச்ச!. வேலையில இருக்கும்போது நான் குடிச்சதா சரித்திரமே இல்லை' என குறிப்பிட்டு மிகவும் கோபத்துடன் தனது ஸ்டைலில் பல கெட்ட வார்த்தைகளை போட்டு திட்டியுள்ளார். மேலும், மற்றொரு பதிவில் தன்னை ஏமாற்றிய இயக்குநரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பதிவிட்டு அவரை அம்பலபடுத்தியுள்ளார்.