உடல் தோற்றம் பற்றிய கமென்ட்டால் அழுது இருக்கேன் - கீர்த்தி பாண்டியன் | அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் | பைட்டர் டீசரில் பிகினி, லிப்லாக்கில் தீபிகா படுகோனே | பைட் கிளப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது | முத்து ரீ-ரிலீஸ் முதல் காட்சியை பார்த்து ரசித்த மீனா | டொவினோ தாமஸ் பட இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட மம்முட்டி பட இயக்குனர் | விவாகரத்து செய்த மனைவிகள் பற்றி ஒருபோதும் தவறாக பேசியது இல்லை ; நடிகர் முகேஷ் | நள்ளிரவு 12.30 மணிக்கே சலார் முதல் காட்சியை துவங்கும் கேரளா திரையரங்குகள் | 'லியோ' படத்திற்குப் பிறகு தவிக்கும் தியேட்டர்காரர்கள் | அமிதாப் குடும்பத்தின் அடுத்த வாரிசு… |
சின்னத்திரை பிரபலங்கள் சம்யுக்தாவும், விஷ்ணுகாந்தும் ஒருவரையொருவர் மாறி மாறி சோஷியல் மீடியாவில் குறை சொல்லி வருகின்றனர். அதற்கேற்றார் போல் நெட்டிசன்களில் சிலர் சம்யுக்தாவிற்கும் சிலர் விஷ்ணுகாந்திற்கும் ஆதரவாக நிலைபாடு எடுத்துள்ளனர். இந்நிலையில், அண்மையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள சம்யுக்தா தனக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு நன்றி சொல்லி நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். அவர் அந்த பதிவில், 'இதற்கு முன்னால் நான் நடித்த கதாபாத்திரங்களுக்காக என் மீது அன்பு செலுத்தினீர்கள். ஆனால், இன்று தனிப்பட்ட முறையில் என் மீது அன்பு காட்டுகிறீர்கள். என்னை உங்கள் சகோதரியாக நடத்துகிறீர்கள். நான் உங்களுக்கு கடமை பட்டிருக்கிறேன். நான் உயிரோடு இருப்பதற்கு தகுதி உள்ளவள் என்று நினைப்பதற்கு நீங்களே காரணம். என்னை அப்படியே ஏற்றுக்கொண்டதற்கு நன்றி!' என்று கூறியுள்ளார்.