ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சின்னத்திரை பிரபலங்கள் சம்யுக்தாவும், விஷ்ணுகாந்தும் ஒருவரையொருவர் மாறி மாறி சோஷியல் மீடியாவில் குறை சொல்லி வருகின்றனர். அதற்கேற்றார் போல் நெட்டிசன்களில் சிலர் சம்யுக்தாவிற்கும் சிலர் விஷ்ணுகாந்திற்கும் ஆதரவாக நிலைபாடு எடுத்துள்ளனர். இந்நிலையில், அண்மையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள சம்யுக்தா தனக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு நன்றி சொல்லி நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். அவர் அந்த பதிவில், 'இதற்கு முன்னால் நான் நடித்த கதாபாத்திரங்களுக்காக என் மீது அன்பு செலுத்தினீர்கள். ஆனால், இன்று தனிப்பட்ட முறையில் என் மீது அன்பு காட்டுகிறீர்கள். என்னை உங்கள் சகோதரியாக நடத்துகிறீர்கள். நான் உங்களுக்கு கடமை பட்டிருக்கிறேன். நான் உயிரோடு இருப்பதற்கு தகுதி உள்ளவள் என்று நினைப்பதற்கு நீங்களே காரணம். என்னை அப்படியே ஏற்றுக்கொண்டதற்கு நன்றி!' என்று கூறியுள்ளார்.