ஒய்.ஜி.மகேந்திரனின் 'சாருகேசி': ரஜினி சொன்னதால் படம் இயக்கிய சுரேஷ்கிருஷ்ணா | 'ஜனநாயகன்' அந்த பட ரீமேக்கா? மீண்டும் வெடித்த சர்ச்சை | பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா வாழ்க்கை சினிமாவாகிறது | வில்லனாக மாறுவாரா விக்ரம்பிரபு | ஒரே நேரத்தில் ஹிந்தி, மலையாளத்தில் தயாராகும் 'திரிஷ்யம் 3' ; துவங்கும் தேதி ரிலீஸ் தேதி இரண்டும் ஒன்றே | ராஜமவுலி பட ஈயை காப்பி அடித்ததாக மலையாள படக்குழுவினருக்கு லீகல் நோட்டீஸ் | போதைப்பொருள் பயன்படுத்த மாட்டேன் ; அபிடவிட் கேட்கும் கேரள தயாரிப்பாளர் சங்கம் | டைட்டிலை மாற்றச் சொல்லி சென்சார் நிர்பந்தம் ; தள்ளிப்போன சுரேஷ் கோபி பட ரிலீஸ் | ஆமதாபாத் விமானத்தில் பயணிக்காத சினிமா இயக்குனரும் விபத்தில் மரணம் ; ஒரு வாரத்திற்கு பின் கண்டுபிடிப்பு | குபேரா படத்திற்காகவும் தேசிய விருது பெறுவாரா தனுஷ்? |
கடந்த 20 வருட பாலிவுட் சினிமாவை ஆய்வு செய்து பார்த்தால் நடிகர் அமீர்கான், மற்ற இரண்டு கான் நடிகர்களை போல, ஆக்சன் பாதையில் செல்லாமல் நல்ல கதை அம்சம் மற்றும் கதாபாத்திரம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருவதை பார்க்க முடியும். அந்த வகையில் கடந்த 2007ல் அவர் நடித்த படம் தான் 'தாரே ஜமீன் பர்'. ஒரு வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கும் அமீர்கானுக்கும் இடையேயான பாசப்பிணைப்பை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. அமீர்கானே இந்த படத்தை இயக்கியும் இருந்தார். ஆஸ்கர் விருது போட்டி வரை இந்த படம் சென்றது.
தற்போது இந்த படம் வெளியாகி 18 வருடங்கள் கழிந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லும் விதமாக 'சிதாரே ஜமீன் பர்' என்கிற திரைப்படம் உருவாகி வந்தது. ஆனால் இந்தப்படத்தை இயக்குனர் ஆர்.எஸ்.பிரசன்னா என்பவர் இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் வரும் ஜூன் 20ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு பேஸ்கட்பால் கோச்சாக அமீர்கான் நடிக்கிறார் என்பதை போஸ்டர் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.