ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
புஷ்பா 2 படத்தை அடுத்து அட்லி இயக்கும் படத்தில் நடிப்பதற்கு தயாராகிக் வருகிறார் அல்லு அர்ஜுன். சயின்ஸ் பிக்ஷன் கதையில் உருவாகும் இந்த படம் மறுபிறவி கதையில் உருவாகிறது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் மூன்று வேடங்களில் நடிக்கப் போகிறார். இந்த படம் சம்பந்தப்பட்ட ஆரம்ப கட்ட பணிகளை மும்பையில் தொடங்கி இருக்கிறார் இயக்குனர் அட்லி. அதன் காரணமாகவே தற்போது அல்லு அர்ஜுனும் மும்பையில் முகாமிட்டுகிறார்.
இந்த நேரத்தில் பாலிவுட் நடிகர் அமீர் கானை நேற்று மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார் அல்லு அர்ஜுன். ஏற்கனவே அமீர்கானின் நடிப்பு திறமை குறித்து பல பேட்டிகளில் பாராட்டி பேசி வந்துள்ள அல்லு அர்ஜுன், தனது புதிய படத்தில் ஏதேனும் முக்கிய வேடத்தில் அவரை நடிக்க வைப்பது சம்பந்தமாக கூட சந்தித்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது ஹிந்தியில் சீதாரே ஜமீன் பர் என்ற படத்தை தயாரித்துள்ளார் அமீர்கான். இந்த படம் விருது பெற்ற ஸ்பானிஷ் படமான சாம்பியன்ஸ் என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இப்படம் ஜூன் 20 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.