'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

புஷ்பா 2 படத்தை அடுத்து அட்லி இயக்கும் படத்தில் நடிப்பதற்கு தயாராகிக் வருகிறார் அல்லு அர்ஜுன். சயின்ஸ் பிக்ஷன் கதையில் உருவாகும் இந்த படம் மறுபிறவி கதையில் உருவாகிறது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் மூன்று வேடங்களில் நடிக்கப் போகிறார். இந்த படம் சம்பந்தப்பட்ட ஆரம்ப கட்ட பணிகளை மும்பையில் தொடங்கி இருக்கிறார் இயக்குனர் அட்லி. அதன் காரணமாகவே தற்போது அல்லு அர்ஜுனும் மும்பையில் முகாமிட்டுகிறார்.
இந்த நேரத்தில் பாலிவுட் நடிகர் அமீர் கானை நேற்று மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார் அல்லு அர்ஜுன். ஏற்கனவே அமீர்கானின் நடிப்பு திறமை குறித்து பல பேட்டிகளில் பாராட்டி பேசி வந்துள்ள அல்லு அர்ஜுன், தனது புதிய படத்தில் ஏதேனும் முக்கிய வேடத்தில் அவரை நடிக்க வைப்பது சம்பந்தமாக கூட சந்தித்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது ஹிந்தியில் சீதாரே ஜமீன் பர் என்ற படத்தை தயாரித்துள்ளார் அமீர்கான். இந்த படம் விருது பெற்ற ஸ்பானிஷ் படமான சாம்பியன்ஸ் என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இப்படம் ஜூன் 20 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.




