அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு | “என் மகள் எனக்கு மூன்றாம் மனுஷி தான்.. அஞ்சு பைசா கூட தரமாட்டேன்” ; ஸ்வேதா மேனன் ஓபன் டாக் | எட்டு வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் துருவா சார்ஜா, ரச்சிதா ராம் ஜோடி | 'விலாயத் புத்தா' கதையும் 'புஷ்பா' கதையும் ஒன்றா ? பிரித்விராஜ் விளக்கம் | அதிதி ராவ் ஹைதரி பெயரில் வாட்ஸ்அப்பில் மோசடி ; நடிகை எச்சரிக்கை | தெலுங்கில் ரீமேக் ஆகும் 'லப்பர் பந்து' | ஆர்யாவிற்கு ஜோடியாகும் அனுபமா பரமேஸ்வரன்! | 'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? |

புஷ்பா 2 படத்தை அடுத்து அட்லி இயக்கும் படத்தில் நடிப்பதற்கு தயாராகிக் வருகிறார் அல்லு அர்ஜுன். சயின்ஸ் பிக்ஷன் கதையில் உருவாகும் இந்த படம் மறுபிறவி கதையில் உருவாகிறது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் மூன்று வேடங்களில் நடிக்கப் போகிறார். இந்த படம் சம்பந்தப்பட்ட ஆரம்ப கட்ட பணிகளை மும்பையில் தொடங்கி இருக்கிறார் இயக்குனர் அட்லி. அதன் காரணமாகவே தற்போது அல்லு அர்ஜுனும் மும்பையில் முகாமிட்டுகிறார்.
இந்த நேரத்தில் பாலிவுட் நடிகர் அமீர் கானை நேற்று மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார் அல்லு அர்ஜுன். ஏற்கனவே அமீர்கானின் நடிப்பு திறமை குறித்து பல பேட்டிகளில் பாராட்டி பேசி வந்துள்ள அல்லு அர்ஜுன், தனது புதிய படத்தில் ஏதேனும் முக்கிய வேடத்தில் அவரை நடிக்க வைப்பது சம்பந்தமாக கூட சந்தித்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது ஹிந்தியில் சீதாரே ஜமீன் பர் என்ற படத்தை தயாரித்துள்ளார் அமீர்கான். இந்த படம் விருது பெற்ற ஸ்பானிஷ் படமான சாம்பியன்ஸ் என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இப்படம் ஜூன் 20 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.