ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

ராஜ்குமார் ராவ், வாமிகா கபி மற்றும் பலர் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியாக வேண்டிய ஹிந்தித் திரைப்படம் 'பூல் சக் மாப்'. இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் இருந்ததால் படம் பார்க்க வரும் ரசிகர்களின் நலன் கருதி படத்தை தியேட்டர்களில் வெளியிடுவதை நிறுத்துவதாக அறிவித்தது தயாரிப்பு நிறுவனமான மேட்டாக் பிலிம்ஸ். அதற்குப் பதிலாக அடுத்த வாரம் மே 16ம் தேதி இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடுகிறோம் என்று அறிவித்தார்கள்.
இப்படத்திற்கான முன்பதிவுகள் ஆன்லைன் தளங்களில் நடைபெற்று வந்த நிலையில் தயாரிப்பு நிறுவனத்தின் இந்த அறிவிப்பு இந்தியாவின் முன்னணி மல்டிபிளக்ஸ் பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனத்திற்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இப்படத்தைத் தியேட்டர்களில் வெளியிடுவதற்காக சுமார் 60 கோடி வரை புரமோஷன் செலவு செய்துள்ளோம்.
டிரைலர்களை இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான தியேட்டர்களில் திரையிட்டது, சமூக வலைதள புரமோஷன், போஸ்டர், பேனர்கள், ஸ்டான்டிஸ் உள்ளிட்டவற்றிற்காக செலவு செய்யப்பட்ட தொகைதான் அந்த 60 கோடி என்றும் அந்த நஷ்டத்தை சரி செய்ய வேண்டும் என்றும் மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அவ்வளவு தொகை என்பது அதிகபட்ச தொகை, படத்தின் தயாரிப்பாளரே இப்படத்தின் புரமோஷனுக்காக 25 கோடிதான் ஒதுக்கியிருந்தார் என்றும் படக்குழு சார்பாக தகவல் வெளியாகி உள்ளது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை ஓடிடி தளத்தில் 8 வாரங்களுக்கு வாரம் வெளியிட தடை விதித்து வழக்கை ஜுன் 16ம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளது.