நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

மலையாளத்தில் 2024ம் ஆண்டு வெளிவந்து 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் 'மஞ்சும்மல் பாய்ஸ்'. அப்படத்தை சிதம்பரம் என்ற இளம் இயக்குனர் இயக்கியிருந்தார். தமிழகத்திலும் அந்தப் படம் வெற்றிகரமாக ஓடியது.
கொடைக்கானலில் உள்ள 'குணா குகை' என்றழைக்கப்படும் இடத்தில்தான் அந்தப் படத்தின் களம் அமைக்கப்பட்டிருந்தது. அப்படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியிருந்தார் நடிகர் கமல்ஹாசன். அப்படம் சம்பந்தப்பட்ட அனைவருமே படத்திற்காக வெகுவாகப் பாராட்டப்பட்டார்கள்.
அப்படத்தின் இயக்குனர் சிதம்பரம் மீது நேற்று கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். 2022ம் ஆண்டு தனது அடுக்குமாடி குடியிருப்பில் அத்து மீறி நுழைந்து தகாத நடத்தையில் சிதம்பரம் ஈடுபட்டதாக அந்தப் பெண் அவரது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 74 மற்றும் 75 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து எர்ணாகுளம் தெற்கு போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளார்கள்.