இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” |
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான 'மஞ்சும் பாய்ஸ்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. 20 கோடி செலவில் தயாரான இந்தப்படம் 242 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்தப் படத்தின் நாயகனான சவுபின் சாஹிர் தான் இதன் முக்கிய தயாரிப்பாளர் ஆவார்.
இந்நிலையில் இந்தப் படத்தின் லாபம் மூலம் ஏராளமாக கருப்புப் பணம் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும், வருமானத்திற்கு ஏற்ப வரி கட்டாமல் மோசடி செய்துள்ளதாகவும் வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொச்சியிலுள்ள சவுபின் சாஹிரின் படத் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. தொடர்ந்து நேற்றும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த படத்தின் மூலம் 148 கோடி வருமானம் கிடைத்ததாக கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ஏற்ப வரி கட்டவில்லை. இந்தப் படத்தில் பல கோடிக்கு கருப்புப் பணம் முதலீடு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. மேலும் சுமார் 60 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது . இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் சவுபின் சாஹிரிடம் வருமான வரித்துறையினர் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.