ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

தமிழில் திருடி, வீரமும் ஈரமும் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் தன்யா. மலையாளத்தில் தன்யா மேரி வர்கீஸ் என்ற பெயரில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். ஜான் ஜேக்கப் என்பரை 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
கணவர் ஜான் ஜேக்கப்பும், தன்யாவும் இணைந்து கட்டுமான நிறுவனம், நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்கள். இவர்களின் நிறுவனத்தின் மீது மோசடி புகார்கள் கூறப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தருவதாகவும், கூடுதல் வட்டி தருவதாகவும் கூறி பலரை ஏமாற்றி 100 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக கேரள போலீஸ், நடிகை தன்யா அவரது கணவர் ஜான் ஜேக்கப் மற்றும் அவரது நண்பர்கள் சிலரை செய்ததுது. பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆனார்கள். வழக்கு நடந்து வருகிறது.
இதற்கிடையில் அவர்கள் மீது அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்தது. நடிகை தன்யாவுககு சொந்தமான திருவனந்தபுரத்தில் உள்ள ரூ.1.56 கோடி மதிப்புள்ள சொத்து உள்பட அவர் பெயரில் உள்ள சொத்துகள் அனைத்தையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.