ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
தமிழில் திருடி, வீரமும் ஈரமும் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் தன்யா. மலையாளத்தில் தன்யா மேரி வர்கீஸ் என்ற பெயரில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். ஜான் ஜேக்கப் என்பரை 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
கணவர் ஜான் ஜேக்கப்பும், தன்யாவும் இணைந்து கட்டுமான நிறுவனம், நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்கள். இவர்களின் நிறுவனத்தின் மீது மோசடி புகார்கள் கூறப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தருவதாகவும், கூடுதல் வட்டி தருவதாகவும் கூறி பலரை ஏமாற்றி 100 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக கேரள போலீஸ், நடிகை தன்யா அவரது கணவர் ஜான் ஜேக்கப் மற்றும் அவரது நண்பர்கள் சிலரை செய்ததுது. பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆனார்கள். வழக்கு நடந்து வருகிறது.
இதற்கிடையில் அவர்கள் மீது அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்தது. நடிகை தன்யாவுககு சொந்தமான திருவனந்தபுரத்தில் உள்ள ரூ.1.56 கோடி மதிப்புள்ள சொத்து உள்பட அவர் பெயரில் உள்ள சொத்துகள் அனைத்தையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.