ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
தருண் மூர்த்தி இயக்கத்தில், மோகன்லால், ஷோபனா மற்றும் பலர் நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான மலையாளப் படம் 'தொடரும்'. மோகன்லால் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'எல் 2 எம்புரான' படம் 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. ஆனால், அந்தப் படத்தின் பட்ஜெட் மட்டுமே 175 கோடி. அதிக பட்ஜெட் படம் என்றாலும் குறைவான லாபத்தையே அந்தப் படம் தந்தது.
அதே சமயம் சுமார் 30 கோடி பட்ஜெட்டில் தயாரான 'தொடரும்' படம் தற்போது உலக அளவில் 175 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. கேரளாவில் அதிக வசூலைக் குவித்த மலையாளப் படம் என்ற சாதனையைப் புரிந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
இதற்கு முன்பு அந்த சாதனையை '2018' படம் வைத்திருந்தது. அந்த சாதனையை 'எல் 2 எம்புரான்' குறைந்த வித்தியாசத்தில் முறியடித்தாகச் சொன்னார்கள். இப்போது 'தொடரும்' படம் அதை முறியடித்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. கேரளாவில் அதிக வசூலைக் குவித்த முதல் நான்கு படங்களில் மோகன்லாலின் 'தொடரும், எல் 2 எம்புரான், புலி முருகன்' ஆகிய மூன்று படங்கள் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.