சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
தருண் மூர்த்தி இயக்கத்தில், மோகன்லால், ஷோபனா மற்றும் பலர் நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான மலையாளப் படம் 'தொடரும்'. மோகன்லால் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'எல் 2 எம்புரான' படம் 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. ஆனால், அந்தப் படத்தின் பட்ஜெட் மட்டுமே 175 கோடி. அதிக பட்ஜெட் படம் என்றாலும் குறைவான லாபத்தையே அந்தப் படம் தந்தது.
அதே சமயம் சுமார் 30 கோடி பட்ஜெட்டில் தயாரான 'தொடரும்' படம் தற்போது உலக அளவில் 175 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. கேரளாவில் அதிக வசூலைக் குவித்த மலையாளப் படம் என்ற சாதனையைப் புரிந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
இதற்கு முன்பு அந்த சாதனையை '2018' படம் வைத்திருந்தது. அந்த சாதனையை 'எல் 2 எம்புரான்' குறைந்த வித்தியாசத்தில் முறியடித்தாகச் சொன்னார்கள். இப்போது 'தொடரும்' படம் அதை முறியடித்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. கேரளாவில் அதிக வசூலைக் குவித்த முதல் நான்கு படங்களில் மோகன்லாலின் 'தொடரும், எல் 2 எம்புரான், புலி முருகன்' ஆகிய மூன்று படங்கள் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.