நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தருண் மூர்த்தி இயக்கத்தில், மோகன்லால், ஷோபனா மற்றும் பலர் நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான மலையாளப் படம் 'தொடரும்'. மோகன்லால் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'எல் 2 எம்புரான' படம் 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. ஆனால், அந்தப் படத்தின் பட்ஜெட் மட்டுமே 175 கோடி. அதிக பட்ஜெட் படம் என்றாலும் குறைவான லாபத்தையே அந்தப் படம் தந்தது.
அதே சமயம் சுமார் 30 கோடி பட்ஜெட்டில் தயாரான 'தொடரும்' படம் தற்போது உலக அளவில் 175 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. கேரளாவில் அதிக வசூலைக் குவித்த மலையாளப் படம் என்ற சாதனையைப் புரிந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
இதற்கு முன்பு அந்த சாதனையை '2018' படம் வைத்திருந்தது. அந்த சாதனையை 'எல் 2 எம்புரான்' குறைந்த வித்தியாசத்தில் முறியடித்தாகச் சொன்னார்கள். இப்போது 'தொடரும்' படம் அதை முறியடித்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. கேரளாவில் அதிக வசூலைக் குவித்த முதல் நான்கு படங்களில் மோகன்லாலின் 'தொடரும், எல் 2 எம்புரான், புலி முருகன்' ஆகிய மூன்று படங்கள் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.