கன்னட மொழியை சிறுமைப்படுத்தவில்லை : நடக்கும் பிரச்னை வேதனை அளிப்பதாக கமல் அறிக்கை | பரமசிவன் பாத்திமாவுக்கு மறு தணிக்கையில் 'ஏ ' சான்றிதழ் | பிளாஷ்பேக்: ஹீரோயின்கள் ஆன லலிதா, பத்மினி | தமிழுக்கு வரும் ஸ்ராவணி ஷெட்டி | பிலிம் சேம்பர் மூலம் கட்டண உயர்வுக்கு விண்ணப்பித்த பவன் கல்யாண் படத் தயாரிப்பாளர் | பிளாஷ்பேக் : விசு இயக்கிய கமர்சியல் ஆக்சன் படம் | ஜுன் 5, 6ல் 4 படங்கள் ரிலீஸ் | கன்னட, தமிழ் விவகாரம் : கமல் மன்னிப்பு கேட்டால் என்ன...? : 2:30 மணி வரை கெடு விதித்த கர்நாடகா ஐகோர்ட் | சினிமாவில் பிஸி, அதேசமயம்... கார்த்தியின் மறுபக்கம் | ஜூலை 11ல் அனுஷ்காவின் 'காதி' ரிலீஸ் |
தற்போது புதிய படங்கள்கூட தியேட்டரில் வெளியான ஒரு சில வாரங்களிலேயே ஓடிடி தளத்தில் வெளியாகிறது. குறிப்பாக சமீபத்தில் வெளியாகி இன்னும் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிற பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் ஓடிடிக்கு வந்து விட்டன. சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் 4 வாரங்களில் ஓடிடிக்கு வந்தது.
இதனால் வசூல் பாதிப்பதாக தியேட்டர் அதிபர்கள் கருதுகிறார்கள். படம் தியேட்டரில் வெளியான 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். தற்போது தயாரிப்பாளர் சங்கம் இரண்டாக பிரிந்து வலுவிழந்திருப்பதால் இதனை கண்டிப்புடன் செயல்படுத்த முடியவில்லை. இதனால் தியேட்டர் அதிபர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த நிலையில் தியேட்டர் அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் சங்க உறுப்பினர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் "தயாரிப்பாளர் சங்கம் கேஆர்ஜி, ராம நாராணயன் காலத்தில் சிறப்பாக செயல்பட்டது. சமீபகாலமாக புதிய படங்கள் ஓடிடியில் வெளியிடப்படுவது குறித்து தயாரிப்பாளர் சங்கம் அக்கறை காட்டவில்லை. இதனால் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே இது குறித்து முக்கியமான ஒரு முடிவெடுக்க வேண்டியது இருக்கிறது. இதுகுறித்து ஒரு கலந்தாய்வு கூட்டத்தை தியேட்டர் அதிபர்கள் சங்கம் நடத்த இருக்கிறது" என்று எழுதியுள்ளார்.