ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தற்போது புதிய படங்கள்கூட தியேட்டரில் வெளியான ஒரு சில வாரங்களிலேயே ஓடிடி தளத்தில் வெளியாகிறது. குறிப்பாக சமீபத்தில் வெளியாகி இன்னும் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிற பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் ஓடிடிக்கு வந்து விட்டன. சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் 4 வாரங்களில் ஓடிடிக்கு வந்தது.
இதனால் வசூல் பாதிப்பதாக தியேட்டர் அதிபர்கள் கருதுகிறார்கள். படம் தியேட்டரில் வெளியான 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். தற்போது தயாரிப்பாளர் சங்கம் இரண்டாக பிரிந்து வலுவிழந்திருப்பதால் இதனை கண்டிப்புடன் செயல்படுத்த முடியவில்லை. இதனால் தியேட்டர் அதிபர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த நிலையில் தியேட்டர் அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் சங்க உறுப்பினர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் "தயாரிப்பாளர் சங்கம் கேஆர்ஜி, ராம நாராணயன் காலத்தில் சிறப்பாக செயல்பட்டது. சமீபகாலமாக புதிய படங்கள் ஓடிடியில் வெளியிடப்படுவது குறித்து தயாரிப்பாளர் சங்கம் அக்கறை காட்டவில்லை. இதனால் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே இது குறித்து முக்கியமான ஒரு முடிவெடுக்க வேண்டியது இருக்கிறது. இதுகுறித்து ஒரு கலந்தாய்வு கூட்டத்தை தியேட்டர் அதிபர்கள் சங்கம் நடத்த இருக்கிறது" என்று எழுதியுள்ளார்.