இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
குபேரா படத்தை அடுத்து ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‛தி கேர்ள் பிரண்ட்' என்ற படம் திரைக்கு வரவுள்ளது. விரைவில் இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப் போகிறார் ராஷ்மிகா. இந்நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛அனிமல் படத்தில் ரன்பீர் கபூரின் கதாபாத்திரம் குறித்து நான் சொன்ன கருத்துக்களை ஊடகங்கள் தவறான கோணத்தில் சித்தரித்து அதை சர்ச்சையாக்கி விட்டதாக'' தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
குறிப்பாக நான் சொல்லும் சாதாரண விஷயங்களை கூட தவறாக புரிந்து கொள்வதோடு, அதை சர்ச்சையாக்க வேண்டும் என்று திட்டமிட்டே வார்த்தைளை திரித்து வெளியிடுகிறார்கள். நான் சொல்லும் கருத்துக்களை விமர்சன கண்ணோட்டத்தில் பார்ப்பதோடு, சோசியல் மீடியாவிலும் டிரோல் செய்கிறார்கள்.
என் கருத்துக்கள் மட்டுமின்றி அதில் அவர்களது சொந்த கருத்துகளையும் நான் சொன்னது போன்று சேர்த்து விவாதங்களுக்கு உட்படுத்துகிறார்கள் என்று கூறியுள்ள ராஷ்மிகா, இனிவரும் காலங்களில் ஊடங்களிடம் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட போகிறேன். விமர்சனங்களை ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு கருத்தையும் நான் வெளியிட மாட்டேன் என்று முடிவு எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.