ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை |
அறிவழகன் இயக்கத்தில், ஆதி, லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'சப்தம்'. பிப்ரவரி 28ம் தேதி வெளியாக வேண்டிய படம் அன்றைய தினம் வெளியாகாமல் மறுநாள் மார்ச் 1ம் தேதி பகல் காட்சி முதல்தான் வெளியானது. கடைசி நேரத்தில் பைனான்சியர் தரப்பிலிருந்து கொடுத்த சிக்கல்தான் காரணம்.
சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமை குறித்த சிக்கலும் காரணம் என்று முதலில் சொல்லப்பட்டது. அந்த சிக்கல் தற்போது வரை நீடித்து வருகிறது. பைனான்சியருக்குத் தரவேண்டிய தொகையை சொன்னபடி வெளியீட்டிற்கு முன்பு தராத காரணத்தால் வழக்கு தொடர்ந்தார்கள். அது குறித்த விசாரணை நடந்து முடிந்த பின் இப்படத்தின் ஓடிடி வெளியீட்டிற்கு தடை விதித்துள்ளார் நீதிபதி.
தயாரிப்பாளருக்கு வந்து சேரவேண்டிய பாக்கி சில கோடிகள் இருக்கிறதாம். அதனால், ஒரு கோடியே 25 லட்ச ரூபாயாக சில தவணைகளில் நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாம். பைனான்சியருக்கு சேர வேண்டிய தொகையை நீதிமன்றத்தில் தவணையில் செலுத்திய பின்னர்தான் ஓடிடி உரிமைக்கு விதித்த தடை நீங்கும் என்கிறார்கள்.
தாமத வெளியீட்டால் படம் வந்த போது பெரிதாக விளம்பரப்படுத்தவில்லை. ஓடிடியில் வெளியாகி வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.