அடுத்த ஐந்து மாதங்களுக்கு வரப் போகும் புதுப் படங்கள் அசத்துமா? | பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் |
ஈரம் படத்திற்கு பிறகு இயக்குனர் அறிவழகன், நடிகர் ஆதி கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‛சப்தம்'. ஈரம் படத்தில் தண்ணீரை வைத்து ஹாரர் திரில்லர் படமாக தந்த இந்த கூட்டணி, இப்போது சப்தம் படத்தில் சப்தத்தை வைத்து வித்தியாசமான ஹாரர் திரில்லர் படமாக எடுத்துள்ளனர். இதில் சிம்ரன், லட்சுமி மேனன், லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆல்பா பிரேம்ஸ், 7ஜி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, தமன் இசையமைத்துள்ளார்.
இந்த படம் இன்று(பிப்., 28) திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படம் காலையில் வெளியாகவில்லை. ஓடிடி மற்றும் சாட்டிலைட் பிரச்னையால் இந்த படத்தின் காலை காட்சி ரிலீஸாகவில்லை என கூறப்படுகிறது. அதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதை தொடர்ந்து தற்போது நண்பகலுக்கு பின் காட்சிகள் ஓபன் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தப்படம் நீண்டகால தயாரிப்பில் இருந்தது. அதுமட்டுமல்ல படத்தின் டிரைலர் மற்றும் முன்னோட்ட காட்சிகள் வெளியாகி படம் வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கூறி வரும் நிலையில் படத்தின் காலை காட்சி வெளியாகாதது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.