நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
ஈரம் படத்திற்கு பிறகு இயக்குனர் அறிவழகன், நடிகர் ஆதி கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‛சப்தம்'. ஈரம் படத்தில் தண்ணீரை வைத்து ஹாரர் திரில்லர் படமாக தந்த இந்த கூட்டணி, இப்போது சப்தம் படத்தில் சப்தத்தை வைத்து வித்தியாசமான ஹாரர் திரில்லர் படமாக எடுத்துள்ளனர். இதில் சிம்ரன், லட்சுமி மேனன், லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆல்பா பிரேம்ஸ், 7ஜி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, தமன் இசையமைத்துள்ளார்.
இந்த படம் இன்று(பிப்., 28) திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படம் காலையில் வெளியாகவில்லை. ஓடிடி மற்றும் சாட்டிலைட் பிரச்னையால் இந்த படத்தின் காலை காட்சி ரிலீஸாகவில்லை என கூறப்படுகிறது. அதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதை தொடர்ந்து தற்போது நண்பகலுக்கு பின் காட்சிகள் ஓபன் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தப்படம் நீண்டகால தயாரிப்பில் இருந்தது. அதுமட்டுமல்ல படத்தின் டிரைலர் மற்றும் முன்னோட்ட காட்சிகள் வெளியாகி படம் வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கூறி வரும் நிலையில் படத்தின் காலை காட்சி வெளியாகாதது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.