டிரைலரைப் பார்த்தால் 'மிஸ்டர் பாரத்' மாதிரிதான் இருக்கு? | 'இட்லி கடை, ஓஜி, காந்தாரா 1' - அடுத்தடுத்து வெளியாகும் டிரைலர்கள் | ஆஸ்கர் தேர்வுக்கு ஒரு தமிழ்ப் படம் கூட இல்லையா ? | குஷி பார்ட் 2 உருவாகுமா? விஜய் மகன், ஜோதிகா மகள் நடிப்பார்களா? | ஏழு பெண்களின் பிரச்னைகளை பேசும் விதமாக ‛கமல் ஸ்ரீதேவி' பெயரில் வெளியாகி உள்ள படம் | இப்போதும் மனதை அழுத்தும் சோகம் ; அனுபமா பரமேஸ்வரன் | பொதுவெளியில் விவாதத்தை ஏற்படுத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மோகன்லால் பேசிய வார்த்தைகள் | பத்து வருட பயணத்தில் முதன்முறையாக தாய்மொழியில் நடிக்கும் சந்தோசத்தில் வர்ஷா பொல்லம்மா | மார்கோ 2ம் பாகத்தில் யஷ் நடிக்கவில்லை ; அவரது டீம் தகவல் | குடியிருந்த கோயில், பாண்டி, வாரிசு - ஞாயிறு திரைப்படங்கள் |
ஈரம் படத்திற்கு பிறகு இயக்குனர் அறிவழகன், நடிகர் ஆதி கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‛சப்தம்'. ஈரம் படத்தில் தண்ணீரை வைத்து ஹாரர் திரில்லர் படமாக தந்த இந்த கூட்டணி, இப்போது சப்தம் படத்தில் சப்தத்தை வைத்து வித்தியாசமான ஹாரர் திரில்லர் படமாக எடுத்துள்ளனர். இதில் சிம்ரன், லட்சுமி மேனன், லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆல்பா பிரேம்ஸ், 7ஜி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, தமன் இசையமைத்துள்ளார்.
இந்த படம் இன்று(பிப்., 28) திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படம் காலையில் வெளியாகவில்லை. ஓடிடி மற்றும் சாட்டிலைட் பிரச்னையால் இந்த படத்தின் காலை காட்சி ரிலீஸாகவில்லை என கூறப்படுகிறது. அதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதை தொடர்ந்து தற்போது நண்பகலுக்கு பின் காட்சிகள் ஓபன் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தப்படம் நீண்டகால தயாரிப்பில் இருந்தது. அதுமட்டுமல்ல படத்தின் டிரைலர் மற்றும் முன்னோட்ட காட்சிகள் வெளியாகி படம் வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கூறி வரும் நிலையில் படத்தின் காலை காட்சி வெளியாகாதது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.