ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

நடிகை வனிதா விஜயகுமார் நடித்து இயக்கிய 'மிசஸ் அண்ட் மிஸ்டர்' படம் கடந்த 11ம் தேதி வெளிவந்தது. இதில் அவரது முன்னாள் காதலன் ராபர்ட் நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் இளையராஜா இசை அமைத்த 'ராத்திரி சிவராத்திரி தூக்கம் போச்சு..'. என்ற பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது.
தன்னிடம் அனுமதி பெறாமல் பாடலை பயன்படுத்தியதாக இளையராஜா சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் ''கமல்ஹாசன் நடித்த மைக்கேல் மதன் காமராஜன் படத்தில் நான் இசையமைத்த சிவராத்திரி என்ற பாடலை என் அனுமதியின்றி மிசஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் பயன்படுத்தியுள்ளனர். இந்த படத்தின் விளம்பரத்திலும் என் பெயர் அனுமதியின்றி சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வனிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் "இந்த பாடலை பயன்படுத்த, பாடல் மீது உரிமை பெற்றுள்ள சோனி நிறுவனத்திடம் முறையான அனுமதி பெற்றுள்ளோம். இந்த வழக்கிற்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தயாராக உள்ளோம்'' என்றார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் "திரைப்படம் வெளியாகி விட்டது. இந்தநிலையில், தடை எதுவும் விதிக்க முடியாது. வேண்டுமென்றால், மனுதாரர் இழப்பீடு பெறலாம். இது குறித்து வனிதா தரப்பு பதில் அனுப்ப நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை வருகிற 21ம் தேதிக்கு தள்ளிவைத்தது.