'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? |
கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதில் நடித்த 10க்கும் மேற்பட்ட நடிகர்களுக்கு மிகப்பெரிய புகழ் வெளிச்சத்தையும் தேடித்தந்தது. அந்த பத்து நடிகர்களில் ஒருவராக நடித்திருந்தவர் நடிகர் கணபதி. இவர் கடந்த சனியன்று நள்ளிரவில் கேரளாவில் உள்ள அங்கமாலி என்கிற இடத்தில் இருந்து கலமசேரி என்கிற இடத்திற்கு கார் ஓட்டி சென்றுள்ளார். சிக்னல்களை மதிக்காமல் வெகு வேகமாக அவர் ஓட்டிச் சென்ற காரை அத்தாணி மற்றும் ஆலுவா உள்ளிட்ட இடங்களில் போலீசார் நிறுத்த சொல்லியும் அவர் நிறுத்தாமல் சென்றுள்ளார்.
ஒரு வழியாக அவரை கலமசேரியில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் அவர் மீது விதிமீறல்களுக்காகவும் மது போதையில் வாகனம் ஓட்டியதற்காகவும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். சமீப காலமாக இப்படி மலையாளத்தில் பல இளம் நடிகர்கள் மதுபோதையில் வாகனம் ஓட்டுவதும் அதனால் அடிக்கடி விபத்துக்களை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்குவதும் தொடர்கதையாகி வருகிறது.