ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' | 'கேம் ஆப் த்ரோன்ஸ்' புதிய தொடர் வெளியானது: உலகம் முழுக்க வரவேற்பு | 'மாஸ்டர் பிளான்' படத்தில் பொலிட்டிக்கல் பிளாக் காமெடி | வில்லனாக நடிக்க விரும்பும் முனீஷ்காந்த் | பிளாஷ்பேக்: 'நிழல்கள்' ராதுவை தெரியுமா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 பேருக்கு வாழ்வளித்த கண்ணதாசன் |

கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதில் நடித்த 10க்கும் மேற்பட்ட நடிகர்களுக்கு மிகப்பெரிய புகழ் வெளிச்சத்தையும் தேடித்தந்தது. அந்த பத்து நடிகர்களில் ஒருவராக நடித்திருந்தவர் நடிகர் கணபதி. இவர் கடந்த சனியன்று நள்ளிரவில் கேரளாவில் உள்ள அங்கமாலி என்கிற இடத்தில் இருந்து கலமசேரி என்கிற இடத்திற்கு கார் ஓட்டி சென்றுள்ளார். சிக்னல்களை மதிக்காமல் வெகு வேகமாக அவர் ஓட்டிச் சென்ற காரை அத்தாணி மற்றும் ஆலுவா உள்ளிட்ட இடங்களில் போலீசார் நிறுத்த சொல்லியும் அவர் நிறுத்தாமல் சென்றுள்ளார்.
ஒரு வழியாக அவரை கலமசேரியில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் அவர் மீது விதிமீறல்களுக்காகவும் மது போதையில் வாகனம் ஓட்டியதற்காகவும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். சமீப காலமாக இப்படி மலையாளத்தில் பல இளம் நடிகர்கள் மதுபோதையில் வாகனம் ஓட்டுவதும் அதனால் அடிக்கடி விபத்துக்களை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்குவதும் தொடர்கதையாகி வருகிறது.




