சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் மலையாளத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற படம் வெளியானது. குறைந்த பட்ஜெட்டில், பெரிய அளவில் பிரபலம் இல்லாத நடிகர்களை வைத்து உருவான இந்த படம் கேரளாவில் மட்டுமல்ல தமிழகத்திலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று 200 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சவுபின் சாஹிர் தான் இந்த படத்தை தனது சகோதரர் மற்றும் நண்பர் ஆகியோருடன் இணைந்து தயாரித்திருந்தார்.
அதேசமயம் எர்ணாகுளத்தை சேர்ந்த சிராஜ் வலயதாரா ஹமீது என்பவர் இந்த படத்தின் தயாரிப்பு செலவுக்காக தான் 7 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் படத்தில் கிடைக்கும் லாபத்தில் 40 சதவீதம் தனக்கு தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், ஆனால் அந்தத் தொகையை கொடுக்காமல் தன்னை தயாரிப்பாளர்கள் மோசடி செய்து விட்டார் என்றும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு குறித்த போலீசாரின் விசாரணைக்கு ஆஜரான சவ்பின் சாஹிர் நீதிமன்றம் என்ன உத்தரவிடுகிறதோ அதன்படி செய்வதற்கு தாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறியிருந்தார்.
ஆனாலும் இந்த மோசடி வழக்கில் அவர் கைது செய்யப்படலாம் என்பதால் முன் ஜாமின் கோரி இருந்தார். அவருக்கு முன் ஜாமீனும் வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் அவரது முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து நீதிமன்றம் இது ஒன்றும் அவசரகதியில் எடுத்து விசாரிக்கப்பட வேண்டிய கிரிமினல் வழக்கு அல்ல.. அவர்களின் முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டியதற்கான அவசியம் எதுவும் இல்லை என்று கூறி புகார்தாரரின் மனுவை தள்ளுபடி செய்தது.




