கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

90களுக்கு பின்னால் வந்த இசையமைப்பாளர்களுக்கு எப்படி இளையராஜா ஒரு மானசீக குருவாக இருந்தாரோ அதேபோல இன்றைய இசையமைப்பாளர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானை என்று சொல்லலாம். அந்த வகையில் பிரபல மலையாள இசையமைப்பாளர் சுசின் ஷியாம், தனது பேட்டிகளில் எல்லாம் ஏ.ஆர்.ரஹ்மானை தனது மானசீக குருவாக புகழ்ந்து பேசி வருபவர். கடந்த வருடம் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ், ஆவேசம் உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர்.
இந்த நிலையில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது பின் தொடர ஆரம்பித்துள்ளார். இதை பார்த்ததும் ரசிகராக மாறி உற்சாகத்தில் துள்ளி குதித்த சுசின் ஷியாம், “நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் இதுதான் முதன்முதலாக என்னுடைய ரசிக தருணம். உங்களுடைய அன்பான மெசேஜால் உண்மையிலேயே பெருமை அடைந்தேன்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சுசின் ஷியாம்..




