ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் |
கடந்த வருடம் மலையாளத்தில் சிறிய பட்ஜெட்டில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 200 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த படத்தை இயக்குனர் சிதம்பரம் பொடுவால் இயக்கியிருந்தார். இவரை தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்த், கமல் உள்ளிட்ட பலரும் நேரில் அழைத்து பாராட்டினார்கள். இதனைத் தொடர்ந்து அவர் தனது அடுத்த படத்தின் ஸ்கிரிப்ட்டுக்கான பணிகளில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது புதிய படத்தை இயக்க தயாராகிவிட்டார் சிதம்பரம். இந்த படத்தின் கதையை கடந்த வருடம் பஹத் பாசில் நடிப்பில் ஆவேசம் என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் ஜித்து மாதவன் தான் எழுதி இருக்கிறார். இன்னொரு பக்கம் இதே ஜித்து மாதவன் தற்போது மோகன்லாலை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கத் தயாராகி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.